இந்தியா உடன் விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன் தலைவர் நம்பிக்கை
டாவோஸ்: '' வர்த்தக ஒப்பந்தத்திற்கு தாய் என பலரால் அழைக்கப்படும் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து ஆகும்,'' என ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் சில பணிகள் உள்ளன. அதே நேரத்தில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இது அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என சிலர் கூறுவர். இது 200 கோடி மக்கள் கொண்ட சந்தையை உருவாக்கும். இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட கால்பங்கை கொண்டு இருக்கும்.
டாவோசில் நடக்கும் உலகப் பொருளாதார மாநாடு முடிந்ததும் இந்தியா செல்ல உள்ளேன். பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரைவுபடுத்தும் வகையில் இந்த பயணம் இருக்கும். இந்தியா ஐரோப்பா இடையே பொருளாதார ஒப்பந்தத்தை வலிமைப்படுத்தவும், ஒத்துழைப்பை வலிமைப்படுத்தவும் ஏராளமான பணிகளை செய்ய வேண்டி உள்ளது.
உலகத்தை எப்போதும் ஐநா தேர்வு செய்யும். ஐரோப்பாவை தேர்வு செய்ய உலகம் தயாராக உள்ளது.
கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதல் வரி விதிப்பது தவறு. நீண்ட கால நட்பு நாடுகள் மீது வரி விதிப்பது தவறான முடிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாரதத்துடன் தடையற்ற ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்பும், ஐரோப்பிய யூனியன்- நாடுகளை வருக வருக என வரவேற்கிறோம் அதே சமயத்தில், தங்களின் யூரோ- கரன்சி-ஐ, BRICS-கரன்சி உடன் இணைத்து விடுங்கள். பாகிஸ்தான், பங்களாதேஷ், அஜர்பைஜான், துருக்கி தவிர்த்து மற்ற அனைத்து முஸ்லீம் நாடுகளும் கூடBRICS-கரன்சி -ல் இணையட்டும். உலக நாடுகளின் பெரும்பான்மை இனிமேல் BRICS-கரன்சி யை சார்ந்து மட்டுமே இயங்க, ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்பு தேவை. வாருங்கள் இணைந்து பணியாற்றுவோம் என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்
No need for any trade, opportunistic pigs, few months ago they called us supporters of the Russian war for buying russian oil, now as usa has given them up they are coming to us, no need for any trade, let them suffer and starve
பிஜேபி அரசின் இன்னொரு சாதனை.
டிரம்ப் கோவிச்சுக்குவாரு. ஏதாவது ஏடாகூடமாக செய்வார்.மேலும்
-
அமைச்சர் நேரு துறையில் பணியிட மாறுதலுக்கு ரூ.366 கோடி லஞ்சம்: டி.ஜி.பி.,க்கு ஈ.டி., கடிதம்
-
டெக்னிக்கல்அனாலிசிஸ் 25,100- புள்ளிகளில் சப்போர்ட் கிடைக்கலாம்
-
10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
-
பொங்கல் பரிசு வாங்க முடியாமல் தவிக்கும் வெளியூர் வாசிகள்
-
மத்திய அரசு ஊழியருக்கு எதிரான ஊழல் புகாரை மாநில போலீசார் விசாரிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்
-
முஸ்லிம் நாடுகளுடன் சேர்ந்து 'இஸ்லாமிய நேட்டோ' அமைக்க பாகிஸ்தான் முயற்சி