பிரான்ஸ் தயாரிப்பு ஒயினுக்கு 200% வரி விதிப்பேன்: அதிபர் டிரம்ப் மிரட்டல்
வாஷிங்டன்: அதிபர் இம்மானுவேல் மேக்ரான் காசா அமைதி வாரியத்தில் இணையாவிட்டால், பிரான்ஸ் தயாரிப்பு ஒயின்களுக்கு 200% வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியுள்ளார்.
இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் போரை முடிவுக்கு கொண்டு காசா அமைதி வாரியத்தை அதிபர் டிரம்ப் அமைத்து உள்ளார். இந்த வாரியத்தில் சேர பல நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் அழைப்புகளை அனுப்பி வருகிறார். இந்த வாரியத்தில் சேர பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிபர் டிரம்ப் கூறியதாவது: யாரும் அவரை விரும்பவில்லை. ஏனென்றால் அவர் மிக விரைவில் பதவியில் இருந்து வெளியேற போகிறார். பிரான்ஸ் தயாரிப்பு ஒயின்களுக்கு 200 சதவீத வரி விதிப்பேன். பின்னர் அவர் தானாக அமைதி வாரியத்தில் இணைவார். இவ்வாறு டிரம்ப் கூறினார்.
இதற்கிடையே மேக்ரான் அனுப்பிய செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டையும் டிரம்ப் பகிர்ந்து கொண்டார்.
அதில் கிரீன்லாந்து தொடர்பான கருத்து வேறுபாடுகளை பற்றி விவாதிக்க G7 நாடுகள் கூட்டத்திற்கு அழைப்பு விடலாம் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முன்மொழிந்துள்ளார்.
அடுத்த திடுக்!
மற்றொரு பதிவில் டிரம்ப் கூறியிருப்பதாவது: திடுக்கிடும் விதமாக, நமது சிறந்த நேட்டோ கூட்டாளியான பிரிட்டன், அமெரிக்காவின் ஒரு முக்கிய ராணுவத் தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவை, எந்தக் காரணமும் இல்லாமல் மொரிஷியஸுக்குத் தாரை வார்த்துக்கொடுக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த முழுமையான பலவீனமான செயலை சீனாவும், ரஷ்யாவும் கவனித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவை வலிமையை மட்டுமே அங்கீகரிக்கும் சர்வதேச வல்லரசுகள்.
அதனால்தான், எனது தலைமையின் கீழ், அமெரிக்கா இப்போது, ஒரே ஒரு வருடத்திற்குள், முன்னெப்போதையும் விட அதிக மரியாதையைப் பெற்றுள்ளது. மிகவும் முக்கியமான நிலப்பகுதியை ஐரோப்பா தாரை வார்த்துக்கொடுப்பது ஒரு பெரும் முட்டாள்தனமான செயலாகும். கிரீன்லாந்தை நாம் ஏன் கையகப்படுத்த வேண்டும் என்பதற்கான தேசிய பாதுகாப்பு காரணங்களின் நீண்ட பட்டியலில் இதுவும் ஒன்றாகும். டென்மார்க்கும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் சரியானதைச் செய்ய வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
படம் வெளியிட்டு அதிரடி!
கிரீன்லாந்து தீவில் அமெரிக்கா கொடியுடன் நிற்கும் புகைப்படத்தை அதிபர் டிரம்ப் வெளியிட்டு இருக்கிறார்.
அதேபோல் வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஆய்வு செய்யும் படத்தை டிரம்ப் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் கனடா அமெரிக்கா ஆக்கிரமித்து இருப்பது போல் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.
இப்படி வொவொரு நாட்டினரையும் கோபத்துக்குள் ஆளாக்கி தனக்குத்தானே ஆபத்தை விலைக்கு வாங்குகிறார் இந்த மதிகெட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப். என்றைக்காவது பாதிக்கப்பட்ட எந்த நாட்டுக்காரனாவது இந்த மதிகெட்டவருக்கு ஆபத்து விளைவிப்பான். அது துப்பாக்கியால் சுடுவதாகவும் இருக்கலாம்.
கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது ஐரோப்பாவிற்கு நல்லது. இல்லையெனில் சீனா தான் ஐரோப்பாவை அழுத்தம் கொடுத்து, பயன்படுத்தும்.
உங்கள் சிந்தனை அமெரிக்க நாட்டிற்கு பயந்தவனின் அடிமை சிந்தனை.
அது உனக்கே நீ வைத்துக்கொள்ளும் ஆப்பு பிரான்ஸ் தயாரிப்பு ஒயின்ஸ்க்கு 200% என்ன 2000% விதித்தாலும் மடைய உனக்கும் உன் நாட்டுமக்கள்வுக்கும் தான் சுமை எது எப்படி இருந்தாலும் மிக விரைவில் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்போவது தெள்ள தெளிவாகி உள்ளது ஒட்டுமொத்த உலகமும் டிரம்ப்யை எதிர்த்து போர்க்கொடி தூக்கி உள்ளது ...Jaihind
ரௌடி தானம் செய்கிறது அமெரிக்கா
அமெரிக்கா இல்லை டிரம்ப்
தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு, trumph பற்றி வரும் செய்திகள் எல்லாம் காமெடி பக்கத்தில் போடவும்
நீங்கள் தாராளமாக வரியை போட்டு கொள்ளுங்கள் அந்த ஒயினை நாங்கள் இறக்குமதி செய்து கொள்கிறோம்
வாழ்த்துக்கள்
ஒயின் வாங்கப்போவது, குடிக்கப்போவது உங்க ஆளுங்க, ஒயின் வாங்க முடியாமல் போதய் மாத்திரை வாங்கி போட்டுக்கொள்ளட்டும், அதில்தானே உங்களுக்கு நல்ல வருமானம், உலகெங்கும், , மக் டோனல்ட், KFC கடைகளை மூடிவிட்டாளே அமெரிக்க பாதுகாப்பு நிர்வாகம் சீர்குலைந்துவிடும்,
ஐயா ட்ரம்பு , அப்படி வரி விதித்தால் உங்க ஊரில் பிரான்ஸ் ஒயின் விஸ்கி எல்லாம் விலை ஏறிடும். அப்பு உங்கள் அமேரிக்கக் குடிமகன்கள் உங்களை சும்மா விடுவார்களா?
அமெரிக்கா ஜனங்க எப்படித்தான் செலக்ட் பன்னங்களோ தெரியல , கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்
அமெரிக்க மக்களைவிடுங்க, நம்மஊரு சிங்கப்பூர் சீமான் பைடன் ஒரு மனநோயாளி, டிரம்ப் தான் ஜனாதிபதியாக வரணும் என்று கருத்துபோடுவாரு, இப்போ பைடன் பரவாய் இல்லை என்று சொல்லுறாரு. இதுதான் சாக்கடை அரசியல்.
2 varushama sandai pottum putin onnum panna mudiyala Ukraine la, inga Por ye illama greeland capture pannutaru Trump athaan thalaivaAN.
என்ன ஒன்னும் பண்ணலையா. நமது மாநிலத்தின் இரண்டு மடங்குக்கு ஒப்பான உக்ரைன் நிலம் இப்பொழுது ரஷ்யா வசம் உள்ளது.மேலும்
-
உரையை முழுமையாக வாசிக்கவில்லை: கவர்னர் மீது கேரள முதல்வர் குற்றச்சாட்டு
-
ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத சீதாஷ்ண நிலை; 16 அடி உயரத்துக்கு பனி கொட்டியதால் மூழ்கிய நகரம்
-
'நாங்கள் மட்டுமே வரி விதிப்போம் நீங்கள் பதில் வரி விதிக்கக்கூடாது': அமெரிக்க நிதியமைச்சர்
-
ஆந்திராவில் அரசு பஸ்களில் 50 லட்சம் பேர்; ஒரே நாளில் ரூ.28 கோடி வருவாய் ஈட்டி சாதனை
-
3 லட்சம் பயணிகள் பாதிப்பு: இண்டிகோ மீது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கடுமையான நடவடிக்கை
-
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கிறதா? கிரிஷ் சோடங்கர் சொன்ன பதில்