திருப்பரங்குன்றம் தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கு அரசியலில் இடமில்லை: நிதின் நபின்
புதுடில்லி: ''ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் அரசியலில் இடம் இல்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்'' என பாஜவின் புதிய தேசியத் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட நிதின் நபின் கூறினார்.
பாஜவின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிதின் நபின் இன்று பாஜ தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா உள்ளிட்டோர் மற்றும் பாஜ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பிரதமருக்கு நன்றி
தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு நிதின் நபின் பேசியதாவது:
உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் போன்ற சாதாரண மனிதனுக்கு இவ்வளவு உயரிய பதவி கிடைப்பதற்கான வாய்ப்பை நீங்கள் வழங்கி உள்ளீர்கள். இதற்காக உங்கள் முன் தலைவணங்குகிறேன். பிரதமருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நாட்டிற்கு சேவை செய்வதற்கு அயராது பாடுபடுவதை நாங்கள் சாதாரண தொண்டராக இருந்து கவனித்து வருகிறோம்.
குஜராத்தின் ஆனந்த் பகுதியில் முதல்முறையாக உங்களுடன் சேர்ந்து பங்கேற்ற நிகழ்ச்சி எனக்கு நினைவில் இருக்கிறது. அப்போது தேசிய பொதுச்செயலாளராக இருந்தேன். அனைவரின் குரல்களை நீங்கள் உன்னிப்பாக கேட்பதை கவனித்தேன். நிகழ்ச்சி முடிந்த பிறகு, நீங்கள் எங்களிடம் பேசிய போது, குஜராத்தில் இருந்து இத்தனை பேர் ஏன் வந்திருந்தார்கள் என்பதைப் பற்றி மிகுந்த உணர்ச்சிப்பூ்ரவமாக விளக்கினீர்கள். அந்த நாளில் தான், ஒரு மனிதர் மக்களின் உணர்வுகளுடன் தன்னை இணைத்துக்கொள்ளும்போது தான் அவர் மகத்தானவர் ஆகிறார் என்பதை புரிந்து கொண்டேன்.
பொறுப்பு
இன்றைய தருணம் எனக்கு ஒரு உறுதிப்பாட்டின் தருணம். இன்று நான் பதவி மட்டும் ஏற்கவில்லை. கட்சியின் சித்தாந்தம், மரபுகள் மற்றும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த தருணத்தில் எனது மூத்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
@quote@இன்று 140 கோடி இந்தியர்களும் வளர்ந்த இந்தியா என்ற கனவுடன் தங்களை இணைத்துக் கொண்டு, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உழைத்து வருகிறார்கள். இதற்காக நான் பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.quote
திருப்பரங்குன்றம் விவகாரம்
சமீபத்தில் தமிழகத்தில் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை எதிர்க்கட்சிகள் தடுத்ததை நாம் பார்த்தோம். இது ஒரு சம்பவம் மட்டும் அல்ல. இன்னும் பல விஷயங்களை எதிர்க்கட்சிகள் செய்வதை பார்த்து வருகிறோம்.
நீதிபதியை பதவி நீக்கம் செய்ய அவர்கள் முயற்சித்தனர். சோமநாதர் பெருமையை பற்றி பேசும் போதும், அதனை திருவிழாவாக பெருமையுடன் கொண்டாடும் போதும் எதிர்க்கட்சிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இத்தகைய மரபுகளை தடுக்க முயற்சிக்கும் சக்திகளை எதிர்கொள்வது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் அரசியலில் இடம் இல்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
சட்டசபை தேர்தல்
அடுத்த சில மாதங்கிளல் தமிழகம்,அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் மக்கள் தொகை அமைப்பு குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மாறி வரும் மக்கள்தொகை அமைப்பு அங்குள்ள சூழ்நிலையை மாற்றுவதுடன், நமக்கு சவாலை ஏற்படுத்துகிறது. இருப்பினும், பாஜ தொண்டர்கள் கடினமாக உழைத்து இந்த ஐந்து மாநிலங்களிலும் பாஜவை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு நிதின் நபின் பேசினார்.
முதலில் தமிழகத்தில் உங்களுக்கான இருப்பை தக்க வைத்துக்கொள்ள பாருங்கள். தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு தீய சக்தி எனும் அளவில்தான் தமிழக மக்கள் எடை போட்டு வைத்துள்ளார்கள். தமிழக மக்களுக்கு நீங்கள் யாரென்றே தெரியாது. பிஜேபி தலைகள் இங்கு வந்து முட்டி மோதி பார்த்தும் ஒன்றும் தாக்கவில்லை. நீங்கள் எம்மாத்திரம்.
அறநிலையத்துறையே எதிர்த்தது ......
தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்கவில்லை இந்த வருடமும் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி உள்ளது. தனிநபர் தவறான தரவுகளை கொடுத்து வாங்கபட்ட நீதியை எந்த வகையில் எதிர்ப்பதாக கருதுவது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
அரசியலில் மட்டும் அல்ல .மக்கள் மனங்களில் கூட இடமில்லாமல் முற்றழிக்க வேண்டும் .திராவிட வைரமென ஜொலிக்க ஆட்சியை கொடுத்தால் ,ஊழல் ,போதை ,சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ,கொலை ,பாலியல் குற்றங்கள் பெருகிய ஆட்சியை தந்த விடியா அரசு, நாங்கள் வைரம் அல்ல ,உப்புப்பரல்கள் ஆம் பத்து பைசாவுக்கு பெறாத, உப்புப்பரல்கள் என தங்களை நிரூபித்து கொண்டிருக்கிறார்கள் .இவர்களை மக்களின் நினைவுகளில் இருந்தும் அகற்ற வேண்டும்
பிஜேபி தமிழ்நாட்டில் வேரூன்ற தமிழ் கலாச்சாரத்தை, தமிழ் தெய்வத்தை விடாமல் தூக்கி பிடிக்க வேண்டும். திராவிட கட்சிகளுக்கு வித்தியாசமாக மக்களிடம் சென்று சேர அது தான் ஒரே வழி. பிஜேபி ஜெயிக்கும் ஒவ்வரு சட்டசபை தொகுதியையும் ஒரு மாடல் தொகுதியாக மாற்றி காண்பிக்கலாம்.
திருப்பரங்குன்றம் என்பது அதற்கு கிடைத்து இருக்கிற மிக பெரிய வாய்ப்பு. A/c ரூமில் இருக்கும் தமிழ்நாட்டு மேல் தட்டு தலைவர்கள் இதை புரிந்து கொண்டதாக தெரியவில்லை. H. ராஜா மற்றும் சில மதுரை உள்ளூர் தலைவர்கள் தவிர.
திருப்பரங்குன்றம், மீனாட்சி அம்மன், திருத்தணி, பழனி, போன்ற பெரிய கோவில்கள் மன்னர்களால் நீண்ட காலம் கட்டப்பட்டு இருக்க வேண்டும். மரணம் நிகழ்ந்து இருக்கும். எந்த இந்து சாதியும் கோவில் அருகில் மயானம் அமைத்த தடயம் இல்லை. கோவில் சுற்றி ஊர் அமைத்து வாழ்ந்த தடயம் இன்றும் உள்ளது. அந்நிய கூலிப்படை ஊடுருவி, முக்கிய திரு கோவில் அருகில் கோவில் வழிபாட்டிற்கு எதிரான செய்கைகளை உருவாக்கினர். கார்த்திகை தீபம் ஏற்ற கூட வழக்கு என்றால், மதம் சாரதா மக்களிடம் மத உணர்வு தோன்றிவிடும். திமுக தவறான பாதையில் செல்கிறது.?
Congratulations
தேசியத் தலைவர் என்றால் நம் நாடு முழுதும் பற்றி தெரிந்திருக்க வேண்டும். கிழக்கு மேற்கு தெரியாதவன் எல்லாம் தமிழகத்தில், பாரதத்தில் தலைவராக இருக்கும் போது, நாட்டைப் பற்றி முழுமையாக தெரிந்த ஒருவர் பதவியேற்ற முதல் நாளிலேயே வடக்கு பற்றியும் தெற்கு பற்றியும் அதன் விவரங்களை பற்றியும் பேசுகிறார் என்றால், நிதின் நபின் திறமை புரிகிறது. காங்கிரஸ், திமுக போன்று அவர்களது குடும்பத்தினர் மட்டுமே தலைமையேற்று நடத்தும் கட்சியாக பாவிக்காமல் , கட்சியையே குடும்பமாக நினைத்து பாஜக உழைப்பதால் தான் பாஜக வளர்கிறது. நம் நாடும் மோடி தலைமையில் பெருமிதம் கொள்கிறது. வாழ்த்துக்கள் நிதின் நபின் அவர்களுக்கு.
தமிழ் தமிழகம் என எப்பொழுதும் பேசும் உங்களைபோன்றவர்களுக்கு வேண்டுமானால் தமிழகத்தைதாண்டி ஒன்றும் தெரியாமல் இருக்கலாம். ஏன் தமிழகத்தையேகூட முழுமையாக தெரியாது. ஆனால் எங்கோ இருந்தபடி தமிழகத்தின் ஒவ்வொரு மூலையையும் மட்டுமல்ல இங்கு நடப்பவை அனைத்தும் அவர்களுக்கு தெரியும்.
பாஜகவின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட திரு நிதின் நவீன் அவர்கள் இன்று பாஜக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு வாழ்த்துக்கள் அவருடைய பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் இந்த இளம் வயதிலேயே தேசியத் தலைவராக பாஜகவில் பதவி வகிப்பது இதுவே முதல்முறை மற்ற எந்த கட்சிகளிலும் இல்லாதது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம் மற்ற கட்சிகளில் சமூகநீதி திராவிட மாடல் என்றெல்லாம் தம்பட்டம் அடிப்பார்கள் ஆனால் அந்தக் கட்சிகளில் அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே கட்சித் தலைவராக முடியும் உதாரணமாக திமுகவை உற்று நோக்கினால் நன்றாக தெரியும் கருணாநிதி ஸ்டாலின் கனிமொழி கலாநிதி உதயநிதி இப்படி நிதிகளாகவே திமுகவில் முக்கிய பொறுப்புகளில் வகிக்க முடியும் என்பது உலகறிந்த உண்மை.. Jaihindமேலும்
-
ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத சீதாஷ்ண நிலை; 16 அடி உயரத்துக்கு பனி கொட்டியதால் மூழ்கிய நகரம்
-
'நாங்கள் மட்டுமே வரி விதிப்போம் நீங்கள் பதில் வரி விதிக்கக்கூடாது': அமெரிக்க நிதியமைச்சர்
-
ஆந்திராவில் அரசு பஸ்களில் 50 லட்சம் பேர்; ஒரே நாளில் ரூ.28 கோடி வருவாய் ஈட்டி சாதனை
-
3 லட்சம் பயணிகள் பாதிப்பு: இண்டிகோ மீது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கடுமையான நடவடிக்கை
-
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கிறதா? கிரிஷ் சோடங்கர் சொன்ன பதில்
-
இந்தியா உடன் விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன் தலைவர் நம்பிக்கை