மூடப்படாத வடிகால்வாய் பட்டாபிராமில் சீர்கேடு

ப ட்டாபிராம், தண்டுரை பிரதான சாலை, தெற்கு பஜார் சாலையில் 100க்கும் மேற்பட்ட சிறு, குறு கடைகள் உள்ளன. இங்குள்ள மழைநீர் வடிகால்வாய், 'பொக்லைன்' இயந்திரம் மூலம் துார் வாரப்பட்டது.

பணி முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், பல இடங்களில் கால்வாய் மூடாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால், கால்வாயில் குப்பை கொட்டுவது அதிகரிப்பதோடு, பகல், இரவு நேரங்களில் கொசு தொல்லையால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அடைப்பு காரணமாக கழிவு நீர் தேங்கி நிற்கிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், கழிவுநீர் வெளியேற வழி செய்து, மூடு கால்வாயாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சசி கணேசன், வியாபாரி, பட்டாபிராம்.

Advertisement