அரசு பஸ்களில் 'தமிழ்நாடு' இடம் பெறாது: அமைச்சர் சிவசங்கர்
சென்னை: ''அரசு பஸ்களில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என எழுதப்படாததற்கு, நடைமுறை யாதார்த்தம்தான் காரணம்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி : அரசு பஸ்களில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என எழுதாமல், வெறுமனே, அரசு போக்குவரத்துக் கழகம் என எழுதியுள்ளனர். இதை மாற்ற வேண்டும்.
அமைச்சர் சிவசங்கர்: போக்குவரத்து கோட்டங்களின் பெயர், கீழே வந்து விடக்கூடாது என்பதற்காக, நடைமுறை யதார்த்தப்படி அப்படி எழுதப்பட்டது. நாம் தமிழகத்தில் தான் இருக்கிறோம். இது தமிழக அரசுதான். இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்று எழுதினால், தமிழ்நாடு அரசு பள்ளி என எழுதச் சொல்வர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது பிடிக்கவில்லையா? பழனிசாமிக்கு முதல்வர் எதிர்ப்பு
-
சபாநாயகர் சொல்ல கூடாது: பழனிசாமி
-
சபாநாயகரை வஞ்ச புகழ்ச்சியால் விமர்சித்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,
-
பழனிசாமிக்கு வாய்ப்பு மறுப்பு; அ.தி.மு.க., வெளிநடப்பு
-
புனிதமான சட்டசபையில் ஸ்டாலின் பொய் சொல்கிறார்
-
தி.மு.க., கூட்டணிக்கு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் ஆதரவு
Advertisement
Advertisement