அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது பிடிக்கவில்லையா? பழனிசாமிக்கு முதல்வர் எதிர்ப்பு
சென்னை: “அரசு ஊழியர்களின் 23 ஆண்டு கால பிரச்னையை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம். அதனால், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்,” என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - தங்கமணி: அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
முதல்வர் ஸ்டாலின்: அரசு ஊழியர்கள் போராடுவதை அக்கறையோடு தங்கமணி குறிப்பிட்டார். இந்த அக்கறை, உங்கள் ஆட்சியில் ஏன் இல்லை?
அரசு ஊழியர்கள் போராடுவது அவர்களின் உரிமை. அவர்களின் போராட்டத்தை முடிக்க வேண்டும் என, அமைச்சர்கள் எத்தனையோ முறை அழைத்து பேசினர். எல்லா பிரச்னைகளையும் முழுக்க தீர்க்கவில்லை என்று சொன்னாலும், 95 முதல் 99 சதவீதம் தீர்த்து வைத்திருக்கிறோம்.
நாங்கள், 'டெஸ்மா, எஸ்மா' என சட்டம் கொண்டு வரவில்லை. இரவோடு இரவாக கைது செய்யவில்லை; சிறையில் அடைக்கவில்லை.
இதெல்லாம் அ.தி.மு.க., ஆட்சியில் நடந்தன. பழனிசாமி முதல்வராக இருந்தபோது, அரசு ஊழியர்கள் எந்தெந்த வகையில் சம்பளம் வாங்குகின்றனர் என்பதை கொச்சைப்படுத்தி பேசியதை, இந்த நாடு மறந்துவிடவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: நாங்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை. தேர்தல் நேரத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக சொன்னீர்கள். இப்போது புதிய திட்டத்தை அறிவித்து உள்ளீர்கள்.
அதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின்: கடந்த 23 ஆண்டு கால பிரச்னையை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம். அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர். அந்த மகிழ்ச்சி உங்களுக்கு பிடிக்கவில்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இது எப்போது பெறுவார்கள
இரண்டு மாதமே உள்ள நிலையில்
எப்போது கிடைக்க பெறுவார்கள்
உண்மையில் மாநில அரசு ஊழியர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை.. அதிலும் தகுதி தேர்வில் வென்று வந்த இடைநிலை ஆசியர்கள் மற்றவர்கள் வாங்குவதில் பாதியை வாங்கிக்கொண்டு இரண்டு பேர் வேலையை ஒருவர் பார்த்து வருகிறார்கள்..அவர்கள் முப்பது நாட்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..
அரசு ஊழியர்கள் எதுல மகிழ்ச்சியா இருக்காங்க?? நீங்களே சொல்லிக்கிட்டா எப்படி. அரசு ஊழியர்கள் சொல்லட்டும். குழந்தை தனமான பேச்சா இருக்கு.
எக்ஸ்ட்ரா அள்ளும் ஊழியர்கள் பற்றி தான் கூறுகிறாரோ?
அரசியல்வியாதிகள், அரசு அகோரிகள் முதல் ஊழியர்கள் வரை மக்களிடம் லஞ்சம் வாங்கி கொண்டு மிக நன்றாக வாரிசுகளுக்கு வாரி சுருட்டி சந்தோஷமா இருக்கிறார்கள்
அரசு ஊழியர் ஒவ்வொருவரும் மகிழ்சியாக இருப்பதற்கு ஒவ்வொரு நாளும் ஆயிரமாயிரம் லஞ்சத்திற்கு ஆசைப்படுகின்றனர்.. அதற்கு முதல்வர் ஒப்புதல் அளிப்பாரா?
மக்கள் எதற்காக லஞ்சம் அளிக்கிறார்கள்..? எதையும் சட்டபடி செய்பவர்கள் லஞ்சம் தர தேவையில்லை..திருடர்களே லஞ்சம் தருகிறார்கள்..
இந்த நாட்டில் அனைத்து கட்சிகளும் வாக்கு வங்கிக்காக அரசு ஊழியர்களுக்காக போராடுவதால் அவர்கள் லஞ்சம் இன்றேல் சேவை இல்லை லஞ்சம் கொடுத்தால் அவர்களுக்காக எத்தகைய குற்றத்தையும் செய்வோம் எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என இறுமாப்புடன் குற்றங்கள் செய்வதையே தொழிலாக கொண்டுள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை என்ற ஒன்று உள்ளது தெரியுமல்லவா..? அதில் ஒரு புகார்..பிரச்சனை முடிந்தது..மேலும்
-
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்; ஐரோப்பிய ஒன்றியத்தை குறை கூறும் அமெரிக்கா
-
யுஜிசி விதிகளில் திருத்தம்: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
-
நஷ்டத்தில் இருந்து மீள்வது எப்படி? 'பீச் ரிசார்ட்'டில் அதிகாரிகள் ஆலோசனை
-
எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் தக்க பதிலடி; அதிபர் டிரம்புக்கு ஈரான் பதில்
-
அமெரிக்க மாணவரின் தமிழ் ஆர்வம்: ஆசிரியர்கள் ஆச்சரியம்
-
கவனிப்பாரின்றி அழியும் நிலையில் பழமையான பெகிலி சிவன் கோவில்