'ஹள்ளி' என்ற ஊர்களின் பெயர் மாற்றப்படும்: அமைச்சர் உறுதி

சென்னை: பா.ம.க., - ஜி.கே.மணி: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், பல ஊர்களின் பெயர்களில் ஹள்ளி என்று இருக்கிறது. அஜ்ஜம்பட்டி என்ற ஊர், அஜ்ஜனஹள்ளி என மாற்றப்பட்டு உள்ளது.

பேச்சு வழக்கில், அது அஜ்ஜம்பட்டி என்றே அழைக்கப் படுகிறது.

மாரண்டஹள்ளி என்பது மாராண்டாம்பட்டியாக இருந்தது. சோம்பட்டி என்ற ஊர், சோமனஹள்ளி என மாற்றப்பட்டு உள்ளது.

இப்படி எங்கு பார்த்தாலும் ஹள்ளி என்று இருக்கிறது. அது தெலுங்கா, கன்னடமா, வடமொழியா என்பது தெரியவில்லை. நடைமுறை பேச்சு வழக்கில் உள்ளபடி, அந்த ஊர்களின் பெயர்களை மாற்ற வேண்டும்.

அமைச்சர் சாமிநாதன்: ஊர்களுக்கு பெயர் வைப்பது என்பது உள்ளாட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது.

இருந்தாலும், எம்.எல்.ஏ.,வின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு, தொடர்புடைய துறைகளுக்கு தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக எடுத்துச் செல்லப்படும். இந்த ஊர்களின் பெயர்களை திருத்தம் செய்ய, முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement