இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்; ஐரோப்பிய ஒன்றியத்தை குறை கூறும் அமெரிக்கா
வாஷிங்டன்: உக்ரைன் மக்களை விட வர்த்தக நலனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக அமெரிக்கா விமர்சித்துள்ளது.
பல ஆண்டுகளாக நடந்து வந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஜனவரி 27ம் தேதி கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை 'அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய்' என்று ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் பெருமையாக கூறியுள்ளார்.
2027ம் ஆண்டு அமலுக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் மூலம், பெரும்பாலான பொருட்களுக்கு இருநாடுகளும் வரிவிலக்கு அளிக்கும். இந்தியாவுக்கு 50 சதவீதம் கூடுதல் வரியை அமெரிக்கா விதித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்த ஒப்பந்தம், இந்திய வர்த்தகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இதனிடையே, இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான இந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு அதிருப்தியடையச் செய்துள்ளது. இந்த நிலையில், உக்ரைன் மக்களை விட வர்த்தக நலனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக அமெரிக்க கருவூல அமைச்சர் ஸ்காட் பெசென்ட் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; ஐரோப்பிய ஒன்றியம் தங்களுக்கு எது சிறந்ததோ, அதை செய்ய வேண்டும். ஆனால், தற்போதைய செயல் (இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம்) எனக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் எங்களுடன் இணைய விரும்பவில்லை.
அதற்கு காரணம், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை செய்ய விரும்பியது தான். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கை உக்ரைன் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வலுவிழக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அவனவன் வயத்து வலி அவனுக்கு...
அப்பாவிக்கு இருநூறு வலி
இந்தியா வல்லரசாயிடுமோ என்கிற பயம் ட்ரம்ப் கண்ணில் ஹெவ்யா தெரியுது.
உக்ரைனுக்கு ட்ரம்ப் ராணுவ தளவாடங்கள் கொடுக்கவில்லை என்றால் இந்த போர் என்றோ முடிவுக்கு வந்திருக்கும் அமெரிக்க டாலருக்கு ஆசைப்பட்டு உக்ரைனை உசுப்பி விட்டு பணம் பார்க்கும் பொறம்போக்கு மற்றவர்கள் நன்றாக இருந்தால் பொறுக்காது.
உக்ரைன் தன்னை எப்படி பார்த்துக்கொள்ளவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும் நாட்டாமை. சொம்ப தூக்கிகிட்டு ஒதுக்கு புறமா போ
எந்த நாடாவது அவர்கள் வளர்ச்சிக்கு வித்திட்டால் டிரம்ப்க்கு வயிற்றிச்சல் வந்துவிடும் அதன் வெளிப்படுத்தான் இது .
அமெரிக்கா பொருளாதார அடக்குமுறை மூலம், இந்திய அரசை தனது வழிக்கு கொண்டுவர முடியும் என்ற கனவு சிதைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா 8 நாடுகளுடன் தடையற்ற வியாபார ஒப்பந்தம் செய்து உள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம், நமது பொருட்களுக்கு நல்ல சந்தையை அங்கே உண்டாக்கி உள்ளது. ட்ரம்பின் அடக்கு முறை வியாபார கொள்கையை ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து போன்ற பல நாடுகள் ஒதுக்குவதற்கு இது ஒரு நல்ல வழியாகும்.
உக்ரைன் எதிரி ருஷ்யா ஆனால் அமெரிக்கா துரோகி. ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்க ஆயுதங்களுக்கு பிரதிபலனாக உக்ரைன் கனிமவளங்களை கொள்ளையடித்தது அமெரிக்கா. எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்று கிராமத்து பழமொழி. உக்ரைனை ஒழித்துக்கட்டி அடுத்து ரஷியாவை நேரடியாக தாக்க துணிவில்லாமல் கொல்லைப்புற வழியாக அதன் பொருளாதாரத்தை நசுக்க பாக்கிறது அமெரிக்கா. இவர்கள் உக்ரைன் மக்களுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்
டிரம்ப் அண்ணே உங்கள புரிஞ்சுக்கவே முடியல. ஒரு பக்கம் உக்ரைன் மக்களுக்காக முதலை கண்ணீர் விடறீங்க, இன்னொரு பக்கம் வெனிசுலா, ஈரான் பக்கம் வாங்கடா சண்டைக்குன்னு தட்டறீங்க. ஒன்னும் புரியல.
உங்களுடன் உலகில் இனி யாருமே வர்த்தக ஒப்பந்தமோ வேறு எந்த உறவோ வைத்துக்கொள்ளப்போவதில்லை அப்போது தெரியும் உன்னுடைய தனிமைத்தனம் நீ தனிமை யாக்கப்பட்டுவிடுவாய் யாருமே உன்னை சீண்டமாட்டார்கள்
மக்கள் தொகை 150 கோடி உள்ள இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்வது நல்லதா 35 கோடி மக்கள் உள்ள அமெரிக்கவில் ஒப்பந்தம் செய்வது நல்லதா.
புரிந்தவன் அறிவாளி. டிரம்ப் அழி வாலி..மேலும்
-
அஜித் பவாருக்கு கட்சி ஒன்று சேர வேண்டுமென்பதே...கடைசி ஆசை! மஹா., துணை முதல்வர் ஆகிறார் பவார் மனைவி?
-
தொழில் முடிவுகளை எடுப்பதில் துணை நின்றுள்ளது 'தினமலர்'
-
நாடு முழுதும் பள்ளி மாணவியருக்கு இலவச நாப்கின்!... உச்ச நீதிமன்றம் உத்தரவு
-
சொந்த மண்ணில் சாதிப்பாரா சாம்சன்: இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு
-
பைனலில் ஜோகோவிச்-அல்காரஸ்: ஆஸி., ஓபனில் முன்னேற்றம்
-
மும்பை அணிக்கு 5வது தோல்வி: 'எலிமினேட்டர்' போட்டிக்கு குஜராத் தகுதி