திமுகவும், அதிமுகவும் வேறு வேறு கட்சியா; கேட்கிறார் சீமான்
சென்னை: 'வரும் சட்டசபை தேர்தலில் ஒரே கொள்கை கொண்ட கூட்டத்தினரிடையே தான் போட்டி. உலகத்திலேயே எனக்கு யாருமே போட்டி கிடையாது,' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஆட்சி முறை மாறுமா?
ஆட்சி மாறுவது முக்கியமில்லை. ஆட்சி முறை மாறுமா? ஊழல், லஞ்சமற்ற நேர்மையான நிர்வாகம் வருமா? என்பது தான் இங்கு கேள்வி. 28 சதவீதம் மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்கப் போறாங்க. பல கோடி பச்சிளம் குழந்தைகள் பசியோடு படுக்குது. கொடுமையை துடைக்க வழியில்லை. தாலிக்கு தங்கம் கொடுப்பாங்க, மது குடிக்க வைத்து அதே தாலியை அவங்களே அவிழ்ப்பாங்க.
போட்டிக்கு ஆளே இல்ல
இலவசமான ரேஷன் அரிசியை எந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வீட்டில் வாங்கி சமைக்கிறார்கள்? ஏனெனில் அதில் தரமில்லை. அந்நிய முதலீடுகளை கொண்டு வருகிறார்கள். அது மாதிரி நிர்வாகம் கொண்டு வருகிறார்களா? வரும் சட்டசபை தேர்தலில் ஒரே கொள்கை கொண்ட கூட்டத்தினரிடையே போட்டி. எனக்கு யாருமே போட்டி கிடையாது. என்னுடைய கோட்பாட்டுக்கு உலகத்தில் அல்லது இந்திய துணைக் கண்டத்தில் ஒரு போட்டியை சொல்லுங்க. பரந்தூர் விமான நிலையம், சென்னையில் புதிய துறைமுகம், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டான்ட் அமைப்பது எல்லாம் பேராசை. எனக்கு யாரும் போட்டியில் இல்லை. ஒருவர் இருமொழிக் கொள்கை என்பார். மற்றொருவருக்கு கொள்கையே தெரியாது.
அரசியல் வியாபாரம்
மக்களுக்குள் ஒரு அறச்சீற்றம் இல்லை. கோபப்பட்டு எழுகிறார்கள். தேர்தல் சமயத்தில் தணிந்து விடுகிறது. கூட்டணி மாறி மாறி போகிறவர்களுக்கு சீட்டும், நோட்டும் அதிகமாக இருக்க வேண்டும். அதிமுகவும், திமுகவும் வேறு வேறு கட்சி என்று சொல்ல முடியுமா? திமுகவில் அமைச்சர்களாக இருப்பவர்கள் முன்னாள் அதிமுக நிர்வாகிகள் தான். திமுகவுக்கு மாற்று அதிமுக என்று ஏதேனும் ஒன்றை சொல்ல முடியுமா? கடன் வளர்ச்சி மட்டும் தான் இந்த ஆட்சிகளில் இருக்கிறது. எதன் அடிப்படையில் கூட்டணி சேருகிறீர்கள். அரசியல் புரட்சி என்று துவங்கி, அரசியல் வியாபாரம் ஆகி விடுகிறது.
மது ஒழிப்பு மாநாடு நடத்திய திருமாவளவன், திமுகவோடு கூட்டணியில் இருக்கிறார். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுபவர்களுடன் தான் கூட்டணி என்று ஏன் கூறவில்லை. கோரிக்கையை நிறைவேற்றாதவரோடு கூட்டணி அமைத்து வலிமையை சேர்த்தால், எப்படி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்கள். தனியாக நின்று மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை நாதக பெற்றுள்ளது. இது வெற்றியா? இல்லையா? தேர்தல் வெற்றிதான் வெற்றி என்றால் கஷ்டம்.
என்னுடைய கொள்கையை எதிர்த்து தான் இங்கு நிறைய கட்சிகள் உள்ளன. கொள்கையை ஏற்று ஒரு கட்சியும் இல்லை. என் மொழி தமிழ், என் இனம் தமிழன். அப்படியிருக்கும் போது என்னை ஏன் திராவிடன் என்று சொல்கிறாய். மாறுதலை விரும்புபவன் காத்திருந்து தான் ஆக வேண்டும். பேயை (திமுக) விரட்டி விட்டு பிசாசை (அதிமுக) உட்கார வைக்கிறீங்க. பாஜ எதிர்ப்பு பற்றி எல்லாம் காலம் காலமாக பேசுவார்கள். 5 ஆண்டுகால பாஜ ஆட்சியை நிலைக்க வைத்து, நாடெங்கும் பாஜ ஆட்சி பரவ காரணமாக இருந்தவர் கருணாநிதி என்று அவரது நினைவு நாணயத்தை வெளியிட்ட ராஜ்நாத்சிங் பேசியுள்ளார்.
தமிழகத்தில் பாஜ வரக் கூடாது என்று சொல்லும் திமுக, காங்கிரஸை உள்ளே வரலாமா? பாஜவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே உள்ள மாறுபாட்டை திமுகவினரால் சொல்ல முடியுமா?. சீமான் கேட்ட சின்னத்தை கொடுக்கக் கூடாது. கேட்ட சின்னம் விஜய்க்கு கிடைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள், இவ்வாறு அவர் கூறினார்.
திமுக அதிமுக இருக்கட்டும், நாம் தமிழர் கட்சி பற்றி பேசுவோம். திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் பல்க்காக அதிமுக âக்கம் சென்றுவிடாமல் லைட்டாக சேதாரம் செய்து திமுகவின் வெற்றிக்கு உதவுவதற்கு சபரீசன் பைனான்ஸில் நடத்தப்படும் கட்சி. வாக்கு பிரிப்பதற்காகவே நடத்தப்பட்டு வரும் கட்சி. தொடர்ந்து பொதுவெளியில் சமூக வலைத்தளங்களில் திமுக எதிர்ப்பை காட்டுவது போல காட்டி திமுகவுக்கு எதிரான கட்சி என்ற இமேஜை கட்டமைத்து தேர்தல்களில் திமுகவின் ஜென்ம எதிரி அதிமுகவுக்கு திமுக எதிர்ப்பு வாக்குகள், வெறுப்பு வாக்குகள் மொத்தமாக போய்விடாமல் தடுப்பதற்கு திமுகவால் நடத்தப்படும் கட்சி நாம் தமிழர் இங்கே எவனும் எம்.எல்.ஏ, எம்.பி ஆனது இல்லை, இப்போ 2026 லும் ஆவப்போவது இல்லை, எதிர்காலத்திலும் ஆவப்போவது இல்லை. ஒரே ஒரு ஆள் மொத்தமாக பெட்டி பார்க்கும் கட்சி. இரண்டாம் மட்ட தலைவனே இல்லாத கட்சி. யாராவது தன்னிச்சையாக வளர்ந்தால் அவனை காலி பண்ணி அனுப்பிவிட்டுதான் மறுவேலை. அய்யநாதன், ராவணா டிவி ஏகலைவன், பேராசிரியர் கல்யாணசுந்தரம், ராஜீவகாந்தி, இப்போ கடைசியாக காளியம்மாள். வாய்சவடாலை மட்டுமே மூலதனமாக வைத்து சிங்கிள் மேன் காசு பார்க்கும் கட்சி நாம் தமிழர். அடுத்து துரத்தியடிக்க போவது இடும்பாவனம் கார்த்தியா அல்லது சாட்டை துரைமுருகனா என்பது தெரியும்.
இவன் ஒரு அடி மூ..... அப்படி என்றால் நீ பிஜேபியுடன் கூட்டணிக்கு போக வேண்டியது தானே. இவன் சொல் செய்கை ஒன்றுமே சரியில்லை. தன்னை நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விடுகிறான்.
ஓவியமே... ECG xray ரெடியாக இருக்கட்டும்
வழக்கமா பின்னால் முக்காடு Hijab போட்டுக் கொண்டிருக்கும்
பெண்ணை காணோம்?
ஹி...ஹி...ஹி...போட்டோவில் இருக்கும் எல்லோரும் கழுத்தில் ஏதோ மாட்டியிருக்கிறார்கள், அது அவர்களுக்கு ஆகாது, அதனால் ஒதுங்கியிருப்பார்கள்.
தம்பி உனக்கு என்னப்பா பிரச்சனை?
தோற்போம் என்று தெரிந்தே பிஜேபி இடம் பணம் வாங்கிக்கொண்டு வோட்டு பிரிக்கும் உத்தமர் இவர்
ஆகியார் கூட இருநூறு வாங்கி தான் கருத்து போடுவார்
இலங்கை போன்று இயற்கை விவசாயம் தான் செய்ய வேண்டும், வரிகளை குறைக்க வேண்டும், இலவசங்களை அள்ளி கொடுக்க வேண்டும், அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க வேண்டும், அனைத்து நிறுவனங்களையும் அரசே நடத்தவேண்டும், அரசே விவசாயம் செய்ய வேண்டும், மானியங்கள் நிறைய கொடுக்க வேண்டும் என்று கூவும் நாம் டுமிழர் கட்சியின் சிறப்பு என்னான்னா, 16 வயதில் ஒரு இளைஞன், சீமானின் உணர்ச்சி பொங்கும் பேச்சை கேட்டுவிட்டு ரத்தம் கொதிக்க நாம் டுமிழரில் சேருவான். அந்த இளைஞனுக்கு 21 வயது ஆகும்போது உலக அரசியல், உலக பொருளாதாரம் இவற்றை படித்து தெரிந்துகொண்டு இந்தாளு பின்னாடியா ஐந்து வருடங்கள் இருந்தோம்னு தனக்கு தானே தலையில் அடித்துக்கொண்டு நாம் டுமிழரை விட்டு ஓடி விடுவான். அவ்வாறு ஓடி வரும் இளைஞன் 21 வயதில் இருந்து 25 வயது வரை சினிமா மோகத்தில் நம்மை காக்க வந்த ஒரே கட்சி தமிழக வெற்றி கழகம் என்று முடிவெடுத்து அதில் சேருவான். 25 வயதில்தான் அவனுக்கு தெரியவரும் விஜய் அரசியலுக்கு தகுதியில்லாதவர் மற்றும் அந்த கட்சி கிருஸ்துவ மிஷினரிகளால் நடத்தப்படும் ஒரு மத வெறி கொண்ட கட்சி மற்றும் அக்கட்சி கொள்கைகள் ஏதும் இல்லாத பல கோமாளிகளின் கூடாரம் என்றும். 25 வயதில் தனது தாத்தா, அப்பா எவ்வாறு கட்டுமர திருட்டு திமுக போன்ற ஊழல் திராவிட கட்சிகளால் ஏமாற்றப்பட்டார்கள் என்பதை சிந்தித்தும், விஜய் போன்ற மத வெறியர்கள் எப்படி தங்களை பயன்படுத்தி கொள்கிறார்கள் என்று அறிந்தும், திருமாவின் சிறுத்தை குட்டீஸ் போன்ற ஜாதி கட்சிகளால் தமிழகம் எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறது என்பதை சிந்தித்தும், தேசிய சிந்தனையுடன், ஊழல், லஞ்சம் அற்ற அரசு அமைய தன்னிச்சையாக சிந்திக்கும் திறன் பெற்று எந்த கட்சியில் சேருவான் என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.
Wondering how this srilanka party survey in India
AAP delhi is a scam and grown with the help of media support
does anyone need this idiot news for TRP?
who he is, to ask any question about India/any state or topic about India
terror organisation being breaded in the name of political pary with media support is a crime
திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் நிறுவிய கட்சி அஇஅதிமுக என அனைவருக்கும் தெரியுமா சீமான்.
தி மு க , அண்ணா தி மு க என்பது ரெண்டும் ஒரே கட்சிதான் ....இந்த வடக்கன் எதிர்ப்பு , தமிழ் தமிழன் தமிழன்டா, ஹிந்து சைவ மத கடவுள்கள் மட்டும் இழித்து பேசுவது , சிறுபான்மை வோட்டுக்கு பாகிஸ்தான் ஆதரவு , ஹிந்தி எதிர்ப்பு ஆனால் உருது மொழி ஆதரவு என்ற விஷயங்களில் சில வித்தியாசம் உண்டு ..எம்ஜியார் எப்போதும் பிரிவினை பேசியது கிடையாது ....எடப்பாடி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வளவோ தேவலை ...இப்பொது போல தெருவுக்கு தெரு எடப்பாடி ஆட்சியில் கஞ்சா விற்பனை இல்லை ..மேலும்
-
எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும்: தி.மு.க.,வுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
-
நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் 7,500 படுகொலைகள்: அன்புமணி ஆவேசம்
-
தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய முடியாது: சுப்பிரமணியன்
-
அய்யப்பன் கோவில் தங்க கவசத்தை வீட்டில் வைத்து பூஜை செய்த நடிகர்
-
இதே நாளில் அன்று
-
எந்த வகையில் நியாயம்?