ககன்யான் திட்டம் தாமதம் ஆகாது; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
கோவை: கடந்த வாரம் பிஎஸ்எல்வி ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்திருந்தாலும், ககன்யான் திட்டம் தாமதம் ஆகாது என இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி அளித்துள்ளார்.
கோவையில் நிருபர்களிடம் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது: விண்வெளி திட்டத்தில் பிரதமர் மோடி தலைமையில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். நம்மிடம் பெரிய, பெரிய திட்டம் இருக்கிறது. விண்வெளி நிலையம் அமைக்கும் திட்டம் இருக்கிறது. வீரர்களை நிலாவுக்கு அனுப்பும் திட்டங்கள் உள்ளது. நல்ல நட்பு உள்ள வெளிநாடுகளுடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம்.
60 நாடுகளுடன் நமக்கு தொடர்பு இருக்கிறது. மாணவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை, ஒன்று நன்றாக படிக்க வேண்டும். இரண்டாவது புத்தகத்தை மட்டும் படிப்பதாக இருக்க கூடாது. மூன்றாவது நல்லவர்களாக வளர வேண்டும்.
நிறைய செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் குறித்து வேலை செய்து வருகிறோம். பிரதமர் மோடியிடம் பேசிய பிறகு அறிவிப்பு வெளியாகும்.
கடந்த வாரம் பிஎஸ்எல்வி ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்திருந்தாலும், ககன்யான் திட்டம் தாமதம் ஆகாது. பிஎஸ்எல்வி ராக்கெட் திட்டம் தோல்விக்கான காரணத்தை நாங்கள் தற்போது ஆய்வு செய்து வருகிறோம். இவை இரண்டும் தனித்தனி திட்டங்கள், மேலும் பிஎஸ்எல்வி ராக்கெட் திட்டத்தின் தோல்வி, நமது எதிர்கால திட்டங்களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு நாராயணன் கூறினார்.
வாசகர் கருத்து (1)
பிரியா - ,
24 ஜன,2026 - 21:20 Report Abuse
இஸ்ரோவின் முயற்சிகள் அனைவரும் வெற்றி கிடைக்கட்டும் ஜெய்ஹிந்த் 0
0
Reply
மேலும்
-
பாராமதி விமான விபத்து; 3 பேர் அடங்கிய விசாரணை குழுவை அமைத்தது மத்திய அரசு
-
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் சொத்து ரூ.68 லட்சம் கோடி
-
மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுங்கள்; எம்.பி.,க்களுக்கு மோடி அறிவுரை
-
ஒரு தளம் கொண்ட கட்டடத்திற்கு 'லிப்ட்' அமைக்க 75 ஆண்டு மரம் வெட்டி சாய்ப்பு
-
தங்கம் விலை தாறுமாறாக உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து புதிய உச்சம்
-
அரசு மரியாதையுடன் அஜித் பவார் உடல் தகனம்; அமித் ஷா உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி
Advertisement
Advertisement