தங்கம் விலை தாறுமாறாக உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து புதிய உச்சம்
சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 9,520 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 1,190 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 16,800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஜனவரி 28) காலை, தங்கம் விலை கிராமுக்கு, 370 ரூபாய் உயர்ந்து, 15,330 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,960 ரூபாய் அதிகரித்து, 1,22,640 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிலோவுக்கு, 13,000 ரூபாய் உயர்ந்து, 4 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை மீண்டும் தங்கம் கிராமுக்கு, 280 ரூபாய் அதிகரித்து, 15,610 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,240 ரூபாய் உயர்ந்து, 1,24,880 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஜனவரி 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 9,520 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 1,190 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 16,800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 14,720 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில், சவரனுக்கு ஒரே நாளில் 9,520 ரூபாய் அதிகரித்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
வெள்ளி விலையும் உச்சம்
வெள்ளி விலை கிராமிற்கு 25 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 425 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 25 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் வெள்ளி விலை கிலோவுக்கு 38 ஆயிரம் ரூபாய் அதிகரித்து புதிய உச்சம் தொட்டு இருக்கிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
@block_Y@
சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ''அமெரிக்கா- ஈரான் இடையே போர் மூண்டால் கணிக்க முடியாத அளவுக்கு தங்கம் விலை உயரும். தங்கம் விலை உயர்ந்தாலும் மக்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். தங்கம் விலை மேலும் அதிகரிக்கும்'' என்றார்.block_Y
கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தை அதிகம் வாங்கிய உலகின் முதல் மூன்று நாடுகள் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா. இந்த மூன்று நாடுகளும் அதிகளவிளான டன்களில் தங்கத்தை வாங்கியுள்ளன. மேலும் இந்தியா முன்பு போல வெளிநாட்டு கரன்சிகளை அமெரிக்க டாலர்களாக கையிருப்பில் வைத்துக் கொள்வதில்லை மாறாக யூரோ, ஸ்டெர்லிங், மற்றும் தங்கமாக வைத்துக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறோம். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் மேல் கோபமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
அமெரிக்காவை நம்ப இப்போது யாரும் தயாராக இல்லை. அமெரிக்க டாலர் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள். இன்று உலகநாடுகள் அனைத்தும் தங்கம் வாங்கி குவிக்கின்றது. சில உலக தனியார் நிறுவனங்களும் தங்கத்தை வாங்கி குவிப்பதாக தகவல் வருகிறது. அதனால் தங்கத்தின் டிமாண்ட் அதிகரித்து அதன் விலை எக்கு தப்பாக ஏறுகிறது. ஒரே ஒரு காரணம் டொனால்ட் டிரம்ப்பின் உருட்டல், மிரட்டல் மற்றும் அராஜக அடாவடித்தனம் தான்.
ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார்கள்.... பல பெண்கள் வாழ்வியல் பாதிக்கும் சூழல் உள்ளது... தங்கம் விலை குறைந்தால் தான் நாம் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளோம் என்று அர்த்தம்.
தங்கத்தின் விலை டாலரில் நிர்ணயிக்கப் படுகிறது. சர்வதேச செலாவணிக்கான டாலரின் மதிப்பு கடுமையாக வீழ்ந்துள்ளதாலும், டாலருக்கான ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளதாலும், தங்கத்திற்கு இந்தியா அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. சில நாட்களில் டாலரின் மதிப்பு உயர்ந்து தங்கம் விலை குறையும்.
என்ன 1 லட்சம் குறையுமா.. ஏழைகளின் எட்டா கனி. பெண் பிள்ளைகளை பெற்றெடுத்த குடும்பங்கள் கதி என்ன. தின கூலிகள் நிலை என்ன.
நான் கூட இந்த கமெண்டை படித்து நல்லது நடக்கட்டும் என்று எண்ணினேன், பிறகு பதிவு செய்தவர் பெயரை பார்த்ததும் புரிந்து விட்டது.
அப்பாவிக்கு ஒரே டாஸ்மாக் அறிவுதான்மேலும்
-
நெல்லை தொகுதியையும் என்னையும் பிரிக்க முடியாது: நயினார் நாகேந்திரன்
-
ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் இல்லை; பெயர் காரணத்தை விளக்கிய முதல்வர்!
-
திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம்: சில நாட்களில் முடிந்து விடும்; அண்ணாமலை
-
பாராமதி விமான விபத்து; 3 பேர் அடங்கிய விசாரணை குழுவை அமைத்தது மத்திய அரசு
-
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் சொத்து ரூ.68 லட்சம் கோடி
-
மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுங்கள்; எம்.பி.,க்களுக்கு மோடி அறிவுரை