ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் சொத்து ரூ.68 லட்சம் கோடி
இந்திய ஆயுள் காப்பீட்டு துறையின் மொத்த சொத்து மதிப்பு, கடந்த ஓராண்டில், 10 சதவீதம் வளர்ச்சி கண்டு, 67.78 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான, ' எல்.ஐ.சி.,' இத்துறையில், 71 பங்குகளை தன்வசம் வைத்து முதலிடத்தில் நீடிக்கிறது.
இத்துறையில், இந்நிறுவனத்தின் சொத்துமதிப்பு 48 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் தனியார் நிறுவனங்கள் பிடித்துள்ளன. சொத்து மதிப்பில் எல்.ஐ.சி., முதலிடத்தில் இருந்தாலும், வேகமான வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள் முந்தியுள்ளன. ஓராண்டில் எல்.ஐ.சி., 8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள் கூட்டாக, 14 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை அதிகரிப்பு: விஜய் குற்றச்சாட்டு
-
தெருநாய் வழக்கில் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு; தீர்ப்பு ஒத்திவைப்பு
-
டிஜிட்டலுக்கு அடிமையாகும் இளம் வயதினர்: மத்திய அரசு கவலை
-
குத்துச்சண்டையில் முதலிடம் பெற்ற மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
-
எரிவாயு தகன மேடையை அகற்ற கோரிய வழக்குகள் தள்ளுபடி
-
முடிவுக்கு வந்தது நீண்ட கால போராட்டம்: புலம் பெயர்ந்த 63 பேருக்கு மறுவாழ்வு திட்டத்திற்கு உ.பி.,அமைச்சரவை ஒப்புதல்
Advertisement
Advertisement