திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம்: சில நாட்களில் முடிந்து விடும்; அண்ணாமலை
சென்னை: திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம், இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என்ற ஒரே நம்பிக்கைதான், தமிழக மக்களுக்கு தற்போது நிம்மதி அளிக்கும் ஒரே விஷயம் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சென்னை அரசு கலைக்கல்லூரியில், கேண்டீனில் பணிபுரியும் 22 வயது இளம்பெண், மூன்று நபர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. கல்வி நிலையங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, மிகவும் அச்சத்தை அளிக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் மேடையேறி, தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது என்று எத்தனை பொய்கள் சொன்னாலும், உண்மை நிலை முற்றிலும் மாறாக இருக்கிறது என்பதை, தினமும் நாம் காணும் இது போன்ற செய்திகள் நிரூபிக்கின்றன.
பாலியல் குற்றங்கள்
முதலில், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்ற கடினமான உண்மையை திமுக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அதற்கேற்ற நடவடிக்கைகளை திட்டமிட முடியும். அதை விடுத்து, ஒரு மாய உலகத்தில் அமர்ந்து கொண்டு, யாரோ எழுதிக் கொடுப்பதை அப்படியே ஒப்பித்துச் செல்வதல்ல முதல்வரின் பணி.
கட்டுக்கடங்காத போதைப் பொருள்கள் புழக்கம், சமூகத்தில் மிகப் பெரிய அவலத்தை ஏற்படுத்தியிருப்பது, பெருகி வரும் பாலியல் குற்றங்களால் வெளிப்படையாகியிருக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என, திமுக அரசின் கையாலாகாத்தனம், அமைதியான நம் தமிழகத்தை முற்றிலுமாக சிதைத்திருக்கிறது.
இருண்ட காலம்
குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால்தான், மேலும் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். ஆனால், தமிழகத்தில் மட்டும்தான், குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திமுக அமைச்சர்களுடன் கட்டிப்பிடித்தபடி போட்டோ எடுத்துக் கொள்ளும் இழிநிலை இருக்கிறது. அந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்ற, எந்த எல்லைக்கும் செல்கிறது திமுக அரசு.
பிறகு எப்படி குற்றம் செய்பவர்களுக்குப் பயம் வரும்? சாதாரண பொதுமக்களுக்குத்தான் பயம் வருகிறது. திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம், இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என்ற ஒரே நம்பிக்கைதான், தமிழக மக்களுக்கு தற்போது நிம்மதி அளிக்கும் ஒரே விஷயம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
இந்த கூறுகெட்ட ஆட்சியில் ரவுடியைப்பார்த்துதான் போலீஸ் பயப்படுவார்கள். கொலை செய்துவிட்டு 15 நாளில் வெளியே சுற்றி திரிவார்கள். யார் குற்றவாளி எண்டற்று போலீசுக்கு நன்றாக தெரியும். ஆனால் நடவடிக்கை எடுக்க விடாமல் அவர்களின் கைகள் கட்டப்பட்டு இருக்கும். அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்புணர்வு, ஆர்ம்ஸ்ட்ரோங் கொலை, கள்ளகுறிச்சி செங்கல்பட்டு சாராய சாவு, கோவை குண்டுவெடிப்பு ஒரு எடுத்துக்காட்டு.
சென்னையில் பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது இரவு 10 மணிக்கு மேல் வீடு திரும்ப தாமதம் ஆனால் உயிரை கையில் பிடித்து கொண்டு தான் இருக்க வேண்டி உள்ளது எந்த நாய் யாரை கடித்து குதறும் என்றே தெரியாத நிலை இரவு போலீஸ் பாரா வையெல்லாம் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது
இருண்ட காலம் பொறக்குது இருண்ட காலம் பொறக்குது என்று ராப்பாட்டாளி இரவில் சிற்றுடுக்கடித்து சேதி சொல்வது போல இருக்கிறது. ed
அருமையான ஆட்சி, மற்ற மாநிலங்களை விட அதிக வளர்ச்சி, நல்ல திட்டங்கள் பல பல, குறை பார்வை உள்ளவர்கள் மட்டும் குற்றம் காண முடியும்.
Hmm...as soon EPS win there will be a light ..ennamo pongada. we trusted Annamalai would lead TN as CM now BJP allied with ....party
இதே கருத்தை நான் இந்த திருட்டு மாடல் ஆட்சி வந்தவுடனே பொங்கல் தொகுப்பில் ஐநூறு கோடி புறங்கை நக்கிய போதும் பள்ளி சிறுமி லாவண்யாவை உடன் பிறப்பு பாலியல் வன்முறை செய்த போதே சொல்லி இருந்தேன் ....
இப்படியே சொல்லி 5 வருடம் ஓடி விட்டது அண்ணா.
இன்னும் 5 வருடம் ஓடும்
அண்ணாமலை தமிழக முதல்வர் வேட்பாளராக வந்திருக்க வேண்டியவர். எல்லா திறமைகள் இருந்தும் தமிழக பாஜகவில் இருக்கும் ஜாதி அரசியல், திராவிட சார்பு அரசியல் மற்றும் பொறாமை அரசியலால் ஓரம் கட்டப்பட்டுவிட்டார். விளங்கிடும் தமிழக பாஜகவின் எதிர்காலம்.
ஏன் இந்திய பிரதமராக்க கூட வரலாம் .. என்று சொல்லுங்களேன் RSS-BJP யின் ஒரு மாநிலத்து தலைவராக இருக்கக் கூட லாயக்கான நபராக இல்லை என்று ஓரம் கட்டப்பட்டவர்
என்ன செய்வது . சின்னப்பன் போன்ற 200 ரூபாய் ஊபிக்கள் நிரம்பி தமிழகத்தில் உள்ளதால் நல்லது நடக்க சில காலம் பிடிக்கும்
புதுசா இருண்ட காலம் 2 வந்துரும்.
நண்பருக்கு, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உங்களுக்கு, சனாதனம் பற்றிய உங்கள் அழகான உண்மையான சிறு விளக்கத்துக்காக என் நன்றியை தெரிவிக்கிறேன்.
பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் ஒரு முறை பேயாட்டம் ஆடி அண்ணாமலையை முதல்வர் ஆக்கிவேன் என்று கதரினார், அவர் எங்கே?
என்ன செய்வது? கட்டுமர குடும்பம் மாதிரி பாஜகவில் குடும்ப ஆட்சி கிடையாது.
அவரு சம்பளம் வாங்கிட்டு அப்பவே போயிட்டார்.
வாய் வாடகை முடிந்து விட்டது.
மீண்டும் பதவி வந்தால் இதுபோல நிறைய வாடகை வாய்களை வாங்கலாம்.
மோடிக்கு பிள்ளைகள் இல்லை, அமித்ஷாஞ் மகன் பதவியையும் சொல்லுங்க, பாஜக கூட்டணி ஆட்சியில் இருபவங்க குடும்ப ஆட்சி இருக்கு.மேலும்
-
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை அதிகரிப்பு: விஜய் குற்றச்சாட்டு
-
தெருநாய் வழக்கில் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு; தீர்ப்பு ஒத்திவைப்பு
-
டிஜிட்டலுக்கு அடிமையாகும் இளம் வயதினர்: மத்திய அரசு கவலை
-
குத்துச்சண்டையில் முதலிடம் பெற்ற மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
-
எரிவாயு தகன மேடையை அகற்ற கோரிய வழக்குகள் தள்ளுபடி
-
முடிவுக்கு வந்தது நீண்ட கால போராட்டம்: புலம் பெயர்ந்த 63 பேருக்கு மறுவாழ்வு திட்டத்திற்கு உ.பி.,அமைச்சரவை ஒப்புதல்