ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் இல்லை; பெயர் காரணத்தை விளக்கிய முதல்வர்!
சென்னை: ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் இல்லை என சிலர் கூறும் நிலையில், இதற்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் ரூ.21.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்பேத்கர் திருமண மாளிகையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இன்றைக்கு சென்னையில் இருக்கும் மேம்பாலங்களைப் பாரத்தாலே உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவை சுரங்கப்பாதைகளாக இருந்தாலும் சரி, பூங்காக்களாக இருந்தாலும் சரி, ஏன் மெட்ரோ ரயில் திட்டமாக இருந்தாலும் சரி அனைத்தும் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை தான்.
2015ம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட வெள்ளத்தால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனால் இயற்கையாகவே எவ்வளவு மழை பெய்தாலும், அதை சமாளிக்கும் ஆற்றல் இன்றைக்கு சென்னை மாநகரத்திற்கு உண்டு. திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களே இதற்கு காரணம். ரூ.6,495 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளது. குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள்.
யாரையும் விமர்சனம் செய்வதற்காக பேசவில்லை. கொச்சைப்படுத்துவதற்காக பேசவில்லை. ஆங்கிலத்தில், வடமொழியில் பெயர் வைப்பதை பார்க்கிறோம். எனது பெயர் ஸ்டாலின். அது தமிழ் பெயர் இல்லை. இருந்தாலும் பெயர் வைத்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் உண்டு. அது உங்களுக்கு நல்லா தெரியும். கம்யூனிச சித்தாந்தத்தின் பேரில் கருணாநிதி வைத்திருந்த நம்பிக்கையில், எனக்கு பெயர் சூட்டியுள்ளார். வேறு எதுவும் கிடையாது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தலைமுறையில் யாருக்கும் தமிழ்ப் பெயர் கிடையாது ..... ஆனால் தமிழ் என் உயிர் மூச்சு என்று பேசுவார்கள் .... தமிழனை மூளைச்சலவை செய்வது திராவிடம் .....
கருணாநிதி டால்மியாபுரம் என்பதை கல்லக்குடி என்று பெயர் மாற்ற ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து போராடியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போதுதான் ஸ்டாலின் பிறந்த செய்தி திமுகவினர் மூலம் அவருக்கு சொல்லப் பட்டதாம். உடனே அவர் தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயரை சூட்டுமாறு தயாளுவிடம் கூறுங்கள் என்று அவர்களிடம் சொல்லி அனுப்பினாராம். அதனால என்ன என்றுதானே கேட்கிறீர்கள்? நன்றாக கூர்ந்து படியுங்கள் அப்போதுதான் இவர்களின் உலகமகா உருட்டு என்ன என்பது உங்களுக்கு புரியும்! கருணாநிதி கல்லக்குடி போராட்டம் செய்து சிறை சென்றது 1953 ம் ஆண்டு ஜூலை 15 ம் தேதி. ஆனால் அவர் மகன் ஸ்டாலின் பிறந்தது 1953 ம் ஆண்டு மார்ச் 1. ரஷ்ய அதிபர் இறந்தது 1953 ம் ஆண்டு மார்ச் 5. இந்த சம்பவத்தை கருணாநிதி 1991 ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசி தன் உபிஸ்களை புல்லரிக்கச் செய்து கண்கலங்க வைத்தார்.
அப்போ இந்த உதயநிதி, இன்ப நிதி என்ற பெயரெல்லாம் எந்த சித்தித்தாந்தன்படி, எந்த மொழியின் அடிப்படையில் என்று விளக்குவாரா?
பேசுவது முழுவதுமே பித்தலாட்டம் என்றால் என்ன செய்வது ?
சரிங்க
உதயநிதி, உதயசூரியன் இவைகள் வடமொழிச்சொற்கள் தானே ஐயா
ஊருக்கு உபதேசம். பேசுவது பகுத்தறிவு, ஈ வே ரா. அது அப்பாவி தொண்டுக்கு. ஆனால் வீட்டில் இருப்பவர்கள் செல்வது கோவில் கோவிலாக.
ஏன் மற்ற தந்தையருக்கு கம்யூனிசத்தில் ஈடுபாடு இருந்து லெனின் என்று பெயர் சூட்டுவர். அதில் உமக்கு என்ன பிரச்சினை. ஊருக்கு உபதேசம் வேண்டாம்.
சரி.. ஒத்துக்கொள்கிறோம் . ஆனா உதயநிதி?
இன்று ஒரு உளறல்
அதெல்லாம் பெரிய விஷயம் இல்லை மலையாளத்தில் இருந்து ஒருத்தர் வந்தார் ஆண்டார், கன்னடத்தில் இருந்து ஒருத்தர் வந்தார் ஆன்டார் இப்படி சகஜம் தான் தமிழக மக்கள் தெளிவா உள்ளனர் இதை வெச்சி பிழைக்கும் கூட்டம் தான் கவலை படுது
டாஸ்மாக்கை திறந்து வைத்துவிட்டு தெளிவு வெங்காயம் என்றால் எப்படி? எதில் தெளிவு?
நீ எங்க இருந்து வந்தாய். உங்க ஊரு காண்டூரா இல்லை ஓங்கோல்லா . ஜெயலலிதா கர்நாடக இருந்து வந்தவர் ஆனால் அவர் தமிழ் ஐயங்கார் குடும்பத்தை சேர்த்தவர். விஷயம் தெரியாமல் இங்க வந்து வாந்தி எடுக்காத...மேலும்
-
2027ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும்; பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
-
யுஜிசி புதிய விதிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட் தடை
-
ஒத்த கருத்துடன் பயணம்; ராகுல், கார்கேவை சந்தித்தப் பின் சசி தரூர் முடிவு
-
நான் ரெடி...? டிடிவி தினகரனும், இபிஎஸூம் ரெடியா...? காத்திருக்கும் ஓபிஎஸ்
-
நெல்லை தொகுதியையும் என்னையும் பிரிக்க முடியாது: நயினார் நாகேந்திரன்
-
திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம்: சில நாட்களில் முடிந்து விடும்; அண்ணாமலை