தெருநாய் வழக்கில் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு; தீர்ப்பு ஒத்திவைப்பு
புதுடில்லி: தெரு நாய் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட், ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
தலைநகர் டில்லியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வந்த நிலையில், அது தொடர்பாக தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடந்த வாரம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'நாய்க்கடி மரணங்களுக்கு நாய் பிரியர்கள், அதற்கு உணவு அளிப்பவர்களையும் பொறுப்பாக்கி, அபராதம் வசூலிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்திருந்தது.
நாய் பிரியர்கள், நாய் கடித்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், விலங்கு உரிமை ஆர்வலர்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்காக ஆஜரான வழக்கறிஞர்கள் உட்பட அனைத்து தரப்பு வாதங்களையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு கேட்டனர்.
விசாரணையை முடித்த பின்னர், சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கில் தனது தீர்ப்பை ஒத்திவைத்தது. மேலும், அனைத்து தரப்பினரும் ஒரு வாரத்திற்குள் தங்கள் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஒரு சாதாரண தெரு நாய்க்காக நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிப்பதா?
கேள்விகள் நன்றாக கேட்டீர்கள் மை லார்ட்,,,, மக்களை கை விட்டு விட வேண்டாம் மை லார்ட்
சிறு வயதில் முனிசிபல் ஊழியர்கள் வெறி நாய் பிடித்து கொன்றுவிடுவர்.? அப்போது வம்பும், வழக்கும் இல்லை. மிருக குணம் கொண்டதால், சிறு குழந்தைகளை கூட கொடூரமாக கடிக்கிறது. கொசு ஒழிப்பு போல் தெரு நாய் நாடு முழுவதும் ஒழிப்பு உள்ளாட்சி. விதண்டா வாதம் செய்யும் நபர் ஆயுள் வரை நீதிமன்றம் வாசல் மிதிக்க பயப்படும் அளவிற்கு தண்டிக்க வேண்டும். உத்தரவை பாராளுமன்றம் சட்டம் இயற்றி முறைபடுத்த வேண்டும்.
இந்த தெருநாய் பிரச்சனைகளுக்கு எல்லாம் மூல காரணம் சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் நல உரிமை ஆர்வலரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா தான். எனவே டில்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்துக் கொண்டுபோய் அவருடைய வீட்டில் விட்டுவிட வேண்டும்.
தவிர ஒவ்வொரு ஊரிலும் இருக்கிற தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்களை பிடித்து அந்தந்த ஊரில் இருக்கும் நாய்ப்பிரியர்களின் வீடுகளில் விடவேண்டும்மேலும்
-
மதுரை சிறுமியை கடத்தி பலாத்காரம் 'மிஸ்டு கால்' காதலால் விபரீதம்
-
துப்பாக்கியை காட்டி மிரட்டிய அ.தி.மு.க., நிர்வாகிக்கு 'காப்பு'
-
வேன் - லாரி மோதி இருவர் பலி
-
போலி தொழுநோய் சான்றிதழ் வழங்கி ஆசிரியரான 27 பேர் மீது விசாரணை?
-
ரூ.2.99 கோடி கையாடல் 2 அலுவலர்கள் சிக்கினர்
-
குமரியில், 1,000 மெகாவாட் நீரேற்று மின் உற்பத்தி திட்டம்