யுஜிசி புதிய விதிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட் தடை
புதுடில்லி: யுஜிசி புதிய விதிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட் தடை விதித்தது. ஏற்கனவே உள்ள 2012ம் ஆண்டு விதிமுறைகளையே பின்பற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜாதி, மத ரீதியிலான பாகுபாட்டை தடுத்து, சம வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் உயர் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. ஜன.14ம் தேதி இந்த விதிகள், யுஜிசி இணையதளத்தில் வெளியானது. யுஜிசியின் இந்த புதிய விதிமுறைகள், தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறி மாணவர்கள் தரப்பில் கடும் எழுந்தது.
விதிகளை திரும்ப பெற வலியுறுத்தி டில்லி, லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். யுஜிசி புதிய விதிமுறைகளுக்கு தடைவிதிக்க கோரி சுப்ரீம்கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று (ஜனவரி 29) சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
யுஜிசியின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், ஏற்கனவே உள்ள 2012ம் ஆண்டு பழைய நடைமுறை தொடரும் என உத்தரவிட்டுள்ளது. யுஜிசி விதிமுறைகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள பொதுநல மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கும், யுஜிசிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை மார்ச் 19ம் தேதிக்கு சுப்ரீம்கோர்ட் ஒத்திவைத்தது.
வாசகர் கருத்து (8)
R K Raman - சென்னை,இந்தியா
29 ஜன,2026 - 18:26 Report Abuse
சுப்ரீம் கோர்ட் ஓரிரு ஆண்டுகள் முன்பு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த புதிய விதிகள் வரையப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது... மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் போல.... 0
0
Reply
velan - california,இந்தியா
29 ஜன,2026 - 17:23 Report Abuse
அமெரிக்காவில் என்னிடம் ஒருவர் அந்த நீங்க நம்மவாளா என்று கேட்டார்கள் ... ஆடி போயிட்டேன் 0
0
C.SRIRAM - CHENNAI,இந்தியா
29 ஜன,2026 - 22:50Report Abuse
அமெரிக்கா போயிட்டு வந்தாலும் இந்த புத்தி மாறவில்லையா ? 0
0
krishnan - chennai,இந்தியா
29 ஜன,2026 - 22:58Report Abuse
மற்றவர்கள் இன்னும் நாசூக்காக கேட்பார்கள். 0
0
Reply
Varadarajan Nagarajan - டெல்டாக்காரன்,இந்தியா
29 ஜன,2026 - 15:30 Report Abuse
ஜாதி மற்றும் மத ரீதியிலான சலுகைகள் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் தொடரவேண்டும், அதனால் எவ்வளவுபேர் பயனடைந்து முன்னேறியுள்ளனர் என்று தெளிவான புள்ளிவிவரங்கள் நம்மிடம் இல்லை. அதேவேளையில் இவற்றை மாற்றியமைப்பதால் எத்தனை சதவிகிதம்பேர் பாதிக்கப்படுவார்கள் என்ற புள்ளிவிவரமும் இல்லை. இந்த சலுகைகள் முதல் தலைமுறையினர் வரையில் அளிக்கலாம் அடுத்த தலைமுறையினர் தகுதியும் அடிப்படையில் அமையலாம் என்ற நீதிபதியின் கருத்தும் உள்ளது. எனவே இதில் உள்ள சாதக பாதகங்களை முழுமையாக ஆராய்ந்து இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்குமானால் அவற்றை என்றுகொள்வதுதான் சரி. அதல்லாமல் அரசியல் நோக்கில் இந்த பிரச்னையை அணுகுவதும் போராட்டங்களை ஊக்குவிப்பதும் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும். நீதிமன்றமும் இதில் நல்ல தீர்ப்பை கொடுக்கும் என நம்புவோம் 0
0
Reply
Ashok Subramaniam - Chennai,இந்தியா
29 ஜன,2026 - 15:26 Report Abuse
உச்ச நீதிமன்றம் நியாயம் வழங்கும். சமூக ஜாதி, மத, மேல்தட்டு, கீழ்தட்டு என்ற வேற்றுமைகளைத் இன்னும் தூக்கிப் பிடித்து 70 ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னும் இவற்றை நீட்டிப்பது, ஒரு சாராருக்கு வழங்கப்படும் அநீதி அல்லவா? யூஜிசி மாற்றங்கள் வரவேற்கத் தக்கவையே.. காலத்திற்கு ஏற்ப, மாறவேண்டியவையே இவையெல்லாம்.. 0
0
Reply
naranam - ,
29 ஜன,2026 - 15:04 Report Abuse
என்ன நினைக்குது மத்திய அரசு? இவர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் என்றா? உச்ச நீதி மன்றம் இப்போது செய்தது தான் சமூக நீதி. 0
0
Reply
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
29 ஜன,2026 - 14:42 Report Abuse
மத்திய அரசுக்கு இது தேவை தான் ... 0
0
Reply
மேலும்
-
சபரிமலை பக்தர்களிடம் கட்டணம் : வசூலிக்க கருத்து கேட்கும் ஐகோர்ட்
-
பிப்., 8 ல் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா; பட்டதாரி ஆசிரியர் கழகம் புறக்கணிக்க முடிவு
-
தமிழக போலீசார் என்ன செய்கின்றனர்: மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
-
பிப்.1ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் காசா எல்லை; இஸ்ரேல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவை முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உண்பார்களா? நயினார் கேள்வி
-
வங்கதேச தேர்தலுக்கு முன் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
Advertisement
Advertisement