ஒத்த கருத்துடன் பயணம்; ராகுல், கார்கேவை சந்தித்த பின் சசி தரூர் முடிவு
புதுடில்லி: ஒத்த கருத்துடன் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுலை சந்தித்த பிறகு, எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூர், கடந்த சில தினங்களாகவே பிரதமர் மோடி மற்றும் பாஜவின் செயல்பாடுகளை தொடர்ந்து பாராட்டி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியினரிடையே இருந்து கடும் அதிருப்தியும், விமர்சனங்களும் வந்தாலும், 'கட்சியை விட தேச நலனே முக்கியம்,' என்று கூறி வருகிறார்.
இதனிடையே, ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சி மற்றும் பார்லிமென்ட் கூட்டத் தொடர் குறித்து சோனியா வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டங்களை சசிதரூர் அடுத்தடுத்து புறக்கணித்து வந்தார். இது பெரும் விவாதத்தை எழுப்பியது.
இந்த நிலையில், தற்போது பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், டில்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுலை, சசிதரூர் இன்று சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அவர், "இன்று பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒருமித்த கருத்துடன் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (10)
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
29 ஜன,2026 - 22:25 Report Abuse
டைட்டானிக் கேப்டன் ராகுலிடமிருந்து சசி தரூர் விலகி வருவது நல்லது. 0
0
Durairaj B - ,இந்தியா
30 ஜன,2026 - 09:10Report Abuse
மோடியை விட்டு விலகுவது சசிதரூர்க்கு நல்லது. கெட்டவர்கள் சகாவாசம் தேவை இல்லை. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
29 ஜன,2026 - 21:49 Report Abuse
ஒத்த கருத்துடன் பயணம்.... சாத்தியமில்லை, காங்கிரஸ் கட்சியில் அது சாத்தியமே இல்லை. சோனியா, ராகுல், பிரியங்கா இவர்கள் சொல்லும் கருத்துக்கு தலையாட்டி பொம்மை மாதிரி மற்றவர்கள் தலையாட்டவேண்டும். அல்லது மவுனமாக இருக்கவேண்டும். அப்பொழுது அக்கட்சியில் இருக்கலாம். 0
0
Reply
பேசும் தமிழன் - ,
29 ஜன,2026 - 19:15 Report Abuse
கோமாளி பக்கத்தில்.... அறிவாளி 0
0
Reply
Tirunelveliகாரன் - திருநெல்வேலி,இந்தியா
29 ஜன,2026 - 17:43 Report Abuse
உங்க கேஸை எல்லாம் திருப்பி தோண்டவா சந்திச்சமான்னு வந்துகிட்டே இருக்கணும். வாயிருக்ன்னு பேசக்கூடாது. 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
29 ஜன,2026 - 16:21 Report Abuse
தரூர் கார்கே யையும் ராகுல் கானையும் ஒரு வழி பண்ணிப்புட்டார் போல. இவரு எக்ஸ் தளத்தில் போட்ட பதிவுக்கு இந்திய எதிர்ப்பையே ரத்தமாக கொண்ட கான் அண்ட கார்கே மூச்சு வுடலையே. தரூர் பெரிய கிலாடி தான். 0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
29 ஜன,2026 - 16:08 Report Abuse
அப்போ இப்போ தேசநலன் முக்கியமில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா? 0
0
Reply
சத்யநாராயணன் - ,
29 ஜன,2026 - 15:36 Report Abuse
சசிதரூர் அவர்களின் முன்பு உள்ள கேள்வியே ராகுல் மற்றும் கார்கேயுடன் ஒருமித்த கருத்துடன் பயணிப்பதா அல்லது நாட்டு மக்களுக்கு உண்மையுடன் சேவை செய்வதா என்பது தானே 0
0
Reply
Modisha - Chennai ,இந்தியா
29 ஜன,2026 - 15:23 Report Abuse
Shashi has lost his credibility. His continuation is dangerous for congress during Kerala elections. 0
0
Reply
Vasan - ,இந்தியா
29 ஜன,2026 - 15:18 Report Abuse
காங்கிரசில் மாற்றம் தெரிகிறது.
முன்பு அனைவரும் தரையில் அமர்ந்திருப்பார்கள்.
தற்போது சோபாவில் அமர்ந்திருக்கிறார்கள். 0
0
Reply
மேலும்
-
சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு இதுவே பயங்கர சாட்சி: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
வாரிசு அரசியல் என்பது இத்துப்போன குற்றச்சாட்டு; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு விவகாரம்; நடிகர் ஜெயராமிடம் விசாரணை
-
ஈரானை நோக்கி பயணிக்கும் அதிநவீன போர்க்கப்பல்கள்: டிரம்ப் தகவல்
-
நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.4,800 சரிவு
-
வங்கதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த 99 ஹிந்து குடும்பங்களுக்கு மறுவாழ்வு
Advertisement
Advertisement