சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு விவகாரம்; நடிகர் ஜெயராமிடம் விசாரணை
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு விவகாரம் தொடர்பாக, சென்னையில் நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் துவாரக பாலகர் சிலைகளின் தங்கக் கவசத்தில் இருந்து 4.54 கிலோ தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வரும் நிலையில், தேவசம் போர்டின் முன்னாள் தலைவர், தங்க முலாம் பூசுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கத் திருட்டு வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததற்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவினர் துரிதப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று நடிகர் ஜெயராமிடமும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். சபரிமலை துவார பாலகரின் சிலையில் இருந்த தங்கக்கவசம், தங்க முலாம் பூசுவதற்காக சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதன் அடிப்படையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு விவகாரம் தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்குச் சென்று வருகிறேன். அந்தப் பயணங்களின் மூலமாகவே உன்னிகிருஷ்ணன் போற்றியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலமாகவே எனக்கு கோவர்தனன் அறிமுகமானார்.
சபரிமலை கருவறைக்காக புதிதாக செய்யப்பட்ட தங்கத் தகடுகளை வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் என உன்னிகிருஷ்ணன் பொட்டி கூறினார். அதன் அடிப்படையிலேயே அந்த பூஜை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற பூஜைகளிலும் நான் கலந்துகொண்டேன்."
எப்படி எல்லாம் பகுத்தறிவு இன்றி ,உண்மையிலேயே பசியோடு இருப்பவர்களுக்கு சோறு போட்டால் செல்வம் தானாகவே பெருகும்
சம்பந்தப்பட்டவர்கள் ஹிந்துக்கள்தானே ????
ஜெயராம் ஒரு தமிழர். அப்பா பாலக்காட்டு பிராமணர். அம்மா கும்பகோணம். முழுவதும் கேரளச் சூழலில் வளர்ந்தார். ஒரு படத்தில் வேலைக்காரியை கரெக்ட் செய்வது போல நடித்திருப்பார். அதை ஒட்டி கேள்வி ஒரு நிருபர் நீங்களும் உங்கள் வேலைக்காரியை கரெக்ட் செய்கிறீர்களா என்று கேட்ட பொழுது அவள் ஒரு கறுத்து தடித்த எருமை என்று சொன்னார். இது நிறவெறி தான். பின்னர் மன்னிப்பு கேட்டார். தங்கம் திருட்டில் அவருக்கு தொடர்பு இருக்காது. சென்னையில் வைத்து அந்தத் தகடுகள் சரி செய்யப்பட்டதால் தங்கள் வீட்டு வைத்து பூஜை செய்தால் நன்மை கிடைக்கும் என நினைத்திருப்பார். அதற்கு மேல் அவர் தவறு செய்திருப்பார் என நினைக்கவில்லை
ஆம் ஜெயராம் தவறு செய்ய வாய்ப்பில்லை
போயும் போயும் ஒரு சினிமா நடிகன் வீட்டில் ஏன் கோவிலுக்கு உரித்தான தங்கத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும் ? என்ன சம்பந்தம் ? தமிழ் நாட்டு மக்கள்தான் சினிமா கூத்தாடிகளை வணங்குபவர்கள் மலையாளிகள் அப்படியல்ல என்றுதானே நம்பி வந்தோம் ??
விசாரணை என சொல்வார்களே தவிர உண்மை என்றுமே வெளிவராது. " தமிழ் நடிகைகள் கறுப்பு மலையாள நடிகைகள் சிவப்பு" என பிதற்றிய மலையாள நடிகன் தமிழ் நாட்டில் வசிப்பது வேடிக்கை.
ரஜினி வீட்டில் வைக்கலாமா. மயில் சிலை யாரு வீட்டில் இருக்கு.
இந்த விஷயத்தில் மலையாளிகளுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. இது உன்னிகிருஷ்ணன் போற்றி மற்றும் ஜெயராமுக்கும் இடையேயான விஷயம்தான்
இந்த கலியுகத்தில் பணத்துக்காக கோயில் தங்க த்தின் மீது ஆசைப்படாமல் இருப்பவர்கள் இனிமே பிறந்தால் தான் ..
எல்லாவற்றையும் உயிர்துடிப்பு நின்றவுடன் இங்கயே விட்டுட்டு போகப்போகும் வாழ்க்கை, இதற்காக இவ்வளவு ஆசை ,அநியாயம், களவு பொய்,திருட்டு தேவை தானா..ஐயப்பன் தான் காப்பாற்ற வேண்டும்
பேஷ் பேஷ் ...அவரவர்கள் கேரக்டர் acter ஒழுக்கமின்மை , lack of commensurate punishment போன்றவைதான் காரணம் . கலியுகம் , கலிகாலம் என்று சொல்லி பலரும் அதர்மங்களை நியாயப்படுத்துவது சரியல்ல .மேலும்
-
வருமான வரித்துறை ரெய்டால் பயம்: பெங்களூருவில் தொழிலதிபர் தற்கொலை
-
ஒரு வாரத்தில் முடிவு; அமைச்சரை சந்தித்த 'டிட்டோ - ஜாக்' அறிக்கை
-
சோழர்களின் பாரம்பரியம், பெருமைக்கு அவமானம்: திருமாவளவனுக்கு அண்ணாமலை கண்டனம்
-
திமுக, உடனான கூட்டணி வலுவாக உள்ளது; காங்., மேலிட பொறுப்பாளர் உறுதி
-
உரிய நேரத்தில் உரிய முடிவு; கூட்டணி பற்றி சொல்கிறார் பிரேமலதா
-
தமிழக தேர்தல் பணிக்கு 72 பொறுப்பாளர்கள்; முக்கிய நிர்வாகிகளை களமிறக்கிய பா.ஜ.,