தமிழக போலீசார் என்ன செய்கின்றனர்: மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
சென்னை: கடலூரில் விவசாயி பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் முருகன், தமிழக போலீசார் என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே விவசாயி ராஜேந்திரனை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி கொடூரமாக தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது? தமிழகத்தில் கொடூர கொலைகளும், கொலை முயற்சி சம்பவங்களும் நடைபெறாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போலீஸ் மீதும், இந்த அரசு மீதும் குற்றம் செய்பவர்களுக்கு பயம் இல்லாததால் தொடர் சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன. போலீஸ் துறை இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை தமிழக போலீசார் உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவை தடுக்க முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் எல்.முருகன் கூறியுள்ளார்.'
கலைக்கப்பட வேண்டிய ஆட்சி.
குற்றவாளிகள் பூராப்பயலும் திமுக உபீஸ் ஆக இருப்பதால் தமிழக போலீஸ் நடவடிக்கை எடுக்க தயங்கி மிக்சர் சாப்பிட்டு காலம் கடத்துகிறது.. போலீஸ்காரர்களுக்கும் புள்ளை குட்டி இருக்கிறது இல்லயா? அந்த பயம்தான்.... திமுகவின் அராஜகத்தை அடக்க சரியானவர்கள் சஞ்சய் காந்தி & இந்திரா காந்தி மட்டுமே....
ஏதோ ஒருசில நேர்மையான காவலர்களை விட்டுவிட்டு, மற்றவர்கள் லஞ்சம் வாங்குகின்றனர், அரசியல்வாதிகளுக்கு சொம்பு தூங்குகின்றனர், சில சமயம் குற்றம் செய்கின்றனர், குற்றம் செய்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
எல் முருகன் கேள்வி கேட்டால் ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை கூட சட்டை செய்யாமல் பதில் சொல்லாமல் ஓடி விடும். இவர் திருட்டு திமுகவின் தலைமையை பார்த்து கேள்விகேட்கிறார். விளங்கிடும் தமிழக பாஜகவின் தலைவர்களின் திறமையும் தகுதியும். அண்ணாமலை என்ற மனிதர் இல்லையென்றால் தமிழக பாஜகவிற்கு முகவரியே இல்லை.
அது சரி. CBI மற்றும் ED இடம் தமிழக ஊழல் அரசியல்வாதிகளின் ஆதாரம் பலமாக இருக்கும் போது எப்படி அவர்கள் சுதந்திரமாக திரிந்து கொண்டு இருக்கின்றினர் என்பது மட்டும் புரியவில்லை. இந்நேரம் சிலர் ஆயுள் தண்டனை முடிந்து வெளியே கூட வந்திருக்க கூடும் - நடவடிக்கை சரியாக எடுத்து இருந்தால்.
நாட்டில் சட்டங்கள் திருந்த பட வேண்டும்
தனி நபர் குற்றத்தை யார் ஆட்சி நடந்தாலும் தடுக்க முடியாது
செய்தவர்களுக்கும் அதேபோல தண்டனை கொடுக்க வேண்டும்
முருகா எதுக்கு உளறுகிறாய்...நேரா பதில் சொல்லு
தமிழகத்தில் உள்ள RSB ஊடகங்கள் ஆளும்கட்சியான திராவிடமாடல் திமுக அரசு சொல்வது போல் எந்த செய்தியை சொல்ல வேண்டும் எதை சொல்லக்கூடாது என்று அரசுக்கு ஆதரவான செய்திகளை மட்டும் கூறிவிட்டு
மற்ற செய்திகளை இருட்டடிப்பு
செய்வது மட்டுமல்லாமல் பிரதமர் மோடி மற்றும் எதிர்கட்சிகள் மீதும் அவதூறு செய்திகளை அனுதினமும் பரப்புகிறார்கள். தமிழகத்தில் தினமும் எத்தனையோ கொலை கொள்ளைகள் நடக்கின்றன அதையெல்லாம் இந்த ஆட்சியில் ஏன் நடக்கிறது
அரசும் போலீசும் என்ன செய்து
கொண்டிருக்கிறார்கள் என்று Debate வைக்காமல் எடப்பாடி பன்னீர்செல்வத்தை ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என்று Debate வைத்து மக்களை
திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்! அதையெல்லாம் மத்திய ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக இருக்கும் நீங்கள் கண்டித்து இருக்கிறீர்களா? அல்லது அவர்களிடம் ஏன் இப்படி அவதூறு பரப்புகிறீர்கள் என்று விளக்கம் கேட்டு ஒரு எச்சரிக்கை நோட்டீஸையாவது அனுப்பியிருக்கிறீர்களா? பிறகு எதற்கு உங்களுக்கு இந்த பதவி?இவ்வளவு நாள் இல்லாமல் இந்த திமுக ஆட்சி முடியும் தருவாயில் உங்கள் வீரத்தை காட்ட வந்திருக்கிறீர்கள். வழக்கம் போல தமிழ்நாட்டுக்கு வந்தோமா Photo க்கு Pose கொடுத்தோமா என்று சுற்றிவிட்டு டில்லிக்கு சென்று விடுங்கள். மோடி உங்களுக்கு கொடுத்திருக்கும் இந்த அமைச்சர் பதவியை
வேறு யாருக்காவது கொடுத்திருக்கலாம் உங்களுக்கு கொடுத்திருப்பது வேஸ்ட்.
சரி உங்கள் பிஜேபி தொண்டர்கள் தடுத்து இருக்கலாமே சரி நீர் என்ன செய்து கொண்டு இருந்தீர் ,
ஏலே கருணாநிதி காலத்திலேயே இருக்காத அந்த இத்துப் பார்முலா இனி எடுபடாது இது டிஜிட்டல் யுகம் புரிஞ்சுக்க. தமிழகத்தில் ஆட்சியில் இருப்பது பாஜகவா? அல்லது திருட்டு திமுகவா?
Murugan is in Delhi. TN police responsible
தமிழகத்தின் சாபகேடு பணத்திற்க்காக மதமாறிய அடிமை
காவல்துறை திமுக அடிமை