ராமதாசை ஆதரித்தவர்கள் என்னை ஆதரிக்கவில்லை: திருமாவளவன் ஆதங்கம்
சென்னை: '' ராமதாஸ் கட்சி துவக்கிய போது ஆதரவு கொடுத்த யாரும், எனக்கு ஆதரவு கொடுக்கவில்லை,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார்.
நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: ராமதாசும், நானும் சேர்ந்து தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை நடத்தினோம். தேர்தல் காரணத்தினால் அவரும் நானும் பிரியும் நிலை ஏற்பட்டது. பிரிந்த போது தமிழ் உணர்வாளர்களும் தமிழ் அறிஞர்களும் யார் பின்னால் போனார்கள். உடனே, ராமதாஸ் பின்னால் போய்விட்டார்கள். ஒருவரும் திருமாவளவன் பின்னால் வரவில்லை. எது தடுத்தது? ஏன் திருமாவளவன் பின்னால் அவர்களால் வர முடியவில்லை?
ராமதாஸ் ஒரு இயக்க தலைவராக வந்தபோது அவரை தோளில் தூக்கி கொண்டாடியவர்கள் பெரியாரியவாதிகள், மார்க்சியவாதிகள், மார்க்சிய லெனினியவாதிகளும், '' திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய தலைவர் வந்துவிட்டார். புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போகிறோம். இனி திமுக அதிமுக வேண்டாம்'' என அவரை தூக்கி தோளில் கொண்டாடியவர்கள் யாராவது திருமாவளவன் எழுச்சி பெற்று வந்த காலத்தில் பக்கத்தில் இருந்து யாராவது ஆறுதல் சொல்லி இருப்பார்களா? ஆதரவு தெரிவித்து இருப்பார்களா? ஒரு வார்த்தை ஊக்கப்படுத்தி இருக்கிறார்களா?
இந்த எளிய மக்களை அமைப்பாக முயற்சிக்கும் இந்த கடினமான போராட்டத்தில் முன்னெடுக்கும் திருமாவளவனுக்கு யாராவது துணை நின்று இருப்பார்களா? யாரும் கிடையாது. அவரை தலைவர், தமிழ் இனத் தலைவர் தமிழ் இனக் காவலர் என்று எல்லாம் தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய ஒருவரும் திருமாவளவன் பின்னால் நிற்கவில்லை. திருமாவளவனுக்கு ஆறுதலாக நிற்கவில்லை. முட்டி மோதி சொந்த காலை ஊன்றி, கையை ஊன்றி, கரணம் போட்டுத்தான் இந்த இடத்தில் திருமாவளவன் நிற்கிறார். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
அவ்வையார் ஆத்திசூடி குழந்தைகளுக்கு திருமா, ராமதாஸ் படிக்க சொல்லி இருந்தால் தமிழ் பாதுகாப்பாக இருந்து இருக்கும். தமிழ் பாதுகாப்பு இயக்கம் எதற்கு? களப்பிரர் வழி தான் திராவிட இயக்கம். தமிழ் கலாச்சாரம் பின்பற்றாமல், வாழ்பவர் தமிழர் ஆக முடியாது. பல சாதிகள் தன் சாதியினரை பிறப்பு முதல் இறப்பு வரை கவனித்தன. பிற சாதியை திராவிடர், சிறுபான்மை மக்களை நீங்கலாக சாதி குழு அமைத்து வேட்டையாடி வாழ்ந்தீர்கள். இனி இருவரையும் யாரும் ஆதரிக்க போவது இல்லை. ?
ஐயா, அழுவாதீர்கள், என்ன வேண்டும், எவ்வளவு வேண்டும் உங்களுக்கு ?
ராமதாஸ், திருமா இருவரும் வேறு வேறு சாதி தலைவர்கள். இவர்கள் எப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் ஓட்டுபோடுவார்கள்? சாதி தலைவராக இருந்துகொண்டு திருமா இப்படி புலம்ப கூடாது. பிற சாதி ஒட்டு வேண்டுமெனில் எல்லோருக்கும் பொதுவான பிஜேபி போன்று கட்சியை ஆரம்பித்து இருக்க வேண்டும்.
பிளாஸ்டிக் நாற்காலி பார்க்க பாவமாய் இருக்கிறது
சுற்றி சுற்றி நீ ஜாதியில் வந்து நில்
சுயமரியாதையை அரசியலுக்காக காவுக்கொடுத்துவிட்டு இதனை பெரிய சாதனையாக நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது உங்களிடமுள்ள பலவீனம். என்றைக்கு உங்களை உட்காரக்கூட சேர் கொடுக்காத நபரிடம் உங்களின் தன்மானத்தை விட்டுக்கொடுத்த செயலை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. பதவியை விட தன்மானம் சுயமரியாதை முக்கியம் திருமா அவர்களே. உங்களின் சேர்க்கை உங்களை கீழிறக்கிவிட்டது
முட்டி மோதி, கரணம்போட்டு, பின் துருப்பிடித்த நாற்காலியின் விளிம்பில் வெட்கத்தை விட்டு உட்கார்ந்துதான் திருமாவளவன் இப்பொழுது தட்டுத்தருமாறி நிற்கிறார். அவருக்கு ஆதரவு கொடுக்கவேண்டாமா?
நாடக காதல், கட்ட பஞ்சாயத்து? சரக்கு மிடுக்கு? நீ தூக்குடா நான் பார்த்து கொள்கிறேனு ராமதாஸ் பேசுவதில்லை?
வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பாமக இல்லை என்றால், சிறுத்தை குட்டிகளின் நாடகக் காதல் பொறுக்கித்தனம் கட்டுப்படுத்த இயலாத நிலைக்கு தலைவிரித்து ஆடியிருக்கும். இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே பாமகவை மற்ற சாதியினர் தேர்தலில் ஆதரிக்காவிட்டாலும் எதிர்க்காமல் இருக்கின்றனர். குருமா கும்பலுக்கு பாமக என்ற ஆப்பு அவசியம் தேவை..
பா ம க தன் சமூக மக்களுக்கு பாடுபட்டது. மற்ற சாதி இந்துக்கள் மீது வன்மம் பாராட்டியதில்ல. கட்ட பஞ்சாயத்து, நாடக காதல் இதை எல்லாம் ஊக்குவித்தது இல்லை. பின் எப்படி திருமா வின் பின்னால் வருவார்கள்?மேலும்
-
தமிழக பவுலர்கள் ஏமாற்றம் * ரஞ்சி கோப்பை போட்டியில்...
-
மீண்டு வருகிறார் ஷூமாக்கர்
-
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு; இதுவரை 16.6 லட்சம் பேர் மனு: கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு
-
ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சு? ஹிந்து முன்னணி தலைவர் கேள்வி
-
கையகப்படுத்தப்பட்ட நிலம் விவகாரம்: மேற்கு வங்க அரசுக்கு கோல்கட்டா உயர்நீதிமன்றம் உத்தரவு
-
துாய்மை பணியாளரின் "தூய்மை" மனசு; கீழே கிடந்த மொபைல் போனை போலீசாரிடம் ஒப்படைத்ததற்கு குவிகிறது பாராட்டு