விலை மதிப்பில்லா அறிவாற்றலை மலிவாக ஏற்றுமதி செய்யும் நிலை; ஸ்ரீதர் வேம்பு வேதனை
சென்னை: 'திறமைமிக்கவர்களின் அறிவாற்றலை மலிவாக ஏற்றுமதி செய்து, மதிப்பு கூட்டப்பட்ட தொழில்நுட்பங்களை அதிக விலைக்கு இறக்குமதி செய்வது தான் இன்றைய இந்தியாவின் நிலையாக இருக்கிறது,' என்று ஸோகோ நிறுவனரும், தலைமை விஞ்ஞானியுமான ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை; காலனித்துவ பொருளாதாரத்தின் சாரம்சமே, மலிவான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற சூழலுக்கு தள்ளப்படுவது தான். நமது மதிப்பு கூட்டும் திறனைக் குறைவாக வைத்ததனால் தான், நாம் ஏழைகளாகவே வைக்கப்பட்டோம்.
திறமைமிக்கவர்களின் அறிவாற்றலை மலிவாக ஏற்றுமதி செய்து, மதிப்பு கூட்டப்பட்ட தொழில்நுட்பங்களை அதிக விலைக்கு இறக்குமதி செய்வது தான் இன்றைய இந்தியாவின் நிலையாக இருக்கிறது. இந்த திறனின் பெரும் பகுதியை நாமே தக்க வைக்க வேண்டும்.
இதன் ஒரு பகுதியாக, வளைகுடா நாடுகளின் முதலீடுகளை இந்தியா மிகவும் நுணுக்கமாக ஆராய வேண்டும். அறிவுசார் சொத்துரிமை உருவாக்கப்படும் நமது நாட்டிலேயே, அவர்கள் அதற்குரிய நியாயமான பங்களிப்பை வழங்குகிறார்களா? அவர்கள் அதற்குரிய வரிகளைச் செலுத்துகிறார்களா? என்று நாம் பார்க்க வேண்டும்.
எதிர்காலத்தில் உலகளாவிய அறிவாற்றல் இன்னும் அதிகமாக இந்தியாவிலிருந்தே வரப்போகிறது. எனவே, இந்தப் பிரச்சனை மேலும் மேலும் முக்கியத்துவம் பெறும். நமது அறிவார்ந்த மக்களால் சேர்க்கப்படும் கூடுதல் மதிப்பு தான் மக்களுக்கு செழிப்பை கொடுக்கும். இது ஒவ்வொரு வளர்ந்த நாட்டிற்கும் பொருந்தும். இதுவே உண்மையான சமூக நீதியாகும்.
'ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம் கிராமப்புற வளர்ச்சி' என்ற கோட்பாட்டின் மையக்கரு இதுதான், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மற்றும்மொரு ஆதிக்கம் இருக்கிறது இந்தியவில்.
காலனித்துவ பொருளாதாரத்தின் சாரம்சமே, மலிவான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வது என்ற சூழலுக்கு தள்ளப்படுவது தான்
வெளிநாட்டில் பத்தாயிரம் டாலருக்கு செய்ய வேண்டிய வேலைய வெறும் ஆயிரம் டாலருக்கு இந்தியாவில் செய்ய வைத்து கொழுத்த லாபம் பார்க்கும் நிறுவனங்கள்
நீங்கள் சொல்லுவது 100க்கு 100 உண்மை என்ன செய்ய...ஊழல் அரசியல் செல்வாக்கில் திகழ்கிறது, திறமைக்கு மலிவு மதிப்பு அதனால் தான் - இந்த பரிதாப நிலை நம் நாட்டில்
இது மாரவேண்டுமானால் மலிவு அரசியல், வாரிசு அரசியல், ஊழல் அரசியல், பிற்போர்க்கு தனமான அரசியல், ஜாதி அரசியல் அடியோடு அழிக்கப்பட வேண்டும் இல்லையுன, தொலைநோக்கு பார்வை கொண்ட வளர்ச்சி சித்தாந்த அரசியல்-நாட்டை நல்வழியில், நடை போடா வைப்பது மிக கடினம்...
இந்தியா சாதி அரசியலின் பயனை அனுபவிக்கிறது. கல்வி கூடங்களில் நடக்கும் பிரச்சனைகளை அமைக்கப்பட்ட பார்லிமென்ட் குழுவின் தலைவர் காங்கிரசின் திக் விஜய் சிங் அரசாங்கத்திற்கு மிக பெரிய பிரச்னையை கொடுத்து இருக்கிறார். அந்த குழுவின் வாதம் ஒரு சில சமூகங்கள் மட்டுமே கல்வி கூடங்களில் பிரச்சனையை எதிர்கொள்ளும் என்பது.
இதை கையில் எடுத்து கொண்டு சில டெல்லி மாணவர்கள், தங்கள் காதலை ஒத்து கொள்ளாத கல்லூரி பெண்களின் மீது தவறான புகார் அளித்து இருக்கிறார்கள்.
அதே போல மருத்துவ உயர் கல்வியில் இட ஒதிக்கீட்டில் மைனஸ் 40 மதிப்பெண் எடுத்தவரையும் சேர்க்குமாறு அரசாணை வந்து உள்ளது. இப்படி படித்த டாக்டர்களிடம் எப்படி முக்கிய அறுவை சிகிச்சைகளை செய்யமுடியும்?
சாதி அரசியலும், மெரிட் இல்லாத கல்வியும் இருக்கும் வரை நன்கு படித்தவன் வேறு நாட்டை நோக்கி செல்வதை தடுக்க முடியாது.
தகுதி உள்ளவர்களுக்கு, வேலை வாய்ப்பு ,ஜாதி அடிப்படையில் தேர்வு செய்யாத வரை இது தொடரும் .
இது தான் ட்ரைன் theory
என்று திறமைக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து, ஜாதி ரீதியிலான முன்னுரிமை தவிர்க்கப்படுகிறதோ அன்றுதான் நம் பாரத தேசத்திற்கு பொற்காலமாக அமையும்.
வேம்புவின் வேதனை நியாயமானதே. மிக சிறந்த அறிவாற்றலை வளர்த்து அநியாயமாக அந்நிய நாட்டின் மோகத்தில் அவர்களாகவே தங்களை விட்டுவிடுகிறார்கள். இதனை கட்டுப்படுத்த சில பல நிபந்தனைகளை செயல்படுத்த வேண்டும்.
வேம்பு சார் சொல்வது சரிதான். இங்கு இருக்கும் அறிவாளிகள் திறமைக்கு மதிப்பில்லை என்று வெளிநாடு சென்று பணத்தில் செல்வாக்கில் கௌரவத்தில் , ஏன் வெளிநாட்டு அரசியலில் கூட செழிக்கிறார்கள். ஆனால் இங்கு தொழில் முனைவோர் பெரும்பாலானோர் ரிஸ்க் எடுப்பதில் சுணக்கம் காட்டுகிறார்கள்.
அறிவாளிகளை வேலைக்கு அமர்த்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. பணத்தை மட்டுமே அளவுகோலாக பார்க்கிறார்கள். விசுவாசம் என்ன என்பதைஅவர்களுக்கு கீழே வேலை பார்ப்பவர்கள் உணருமாறு நடந்துகொள்வதில்லை, அப்படி அவர்களை நடத்துவதில்லை. பணியாளர்களும் தங்கள் முதலாளிகளுக்குக்கு உண்மையானவர்களாக நடப்பதில்லை.
இந்த 21ம் நூற்றாண்டில் தொடர்ந்து பத்து வருடங்கள் ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள் தற்போது மிகவும் குறைவு. இது இந்த தலைமுறையில் வணிக மற்றும் மேலாண்மை உலகம் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக நமது இந்தியாவில் அனுபவித்து வரும் கசப்பான உண்மை. ஒரு சாரார் தன் எதிர்சாரார் மீது இல்லாத மற்றும் அவர்களிடம் இழந்த நம்பிக்கையை பறைசாற்றுகிறது. வணிக மயம் என்ற போர்வையில் ,
தொழில் தர்மங்களை மீறுவதும் பித்தலாட்டங்களை நியாயப்படுத்துவதும் சரிதான் என்று சொல்வதற்கு ஒரு கூட்டமே செயல்படுகிறது. வணிக உலகில் பித்தலாட்ட அரசியல் கலப்பும் , தேவையில்லாத அரசியல் தலையீடும் , அதிகார திமிர் பிடித்த அரசியல் கட்சிகளும் காரணிகளாக அமைந்துவிடுகின்றன.மேலும்
-
திருடப்பட்ட சோழர் கால சிலைகள்; இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்கிறது அமெரிக்கா
-
பிப்ரவரி 5ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை; இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த திட்டம்
-
திமுகவை வெளியேற்றி தமிழகத்தை மீட்கும் தினம் தொலைவில் இல்லை; நயினார் நாகேந்திரன்
-
காங்கிரஸூடன் எந்த மோதல் போக்கும் இல்லை; சொல்கிறார் கனிமொழி
-
சென்னையில் பீஹார் தம்பதி கொடூர கொலை; 4 நாட்களுக்கு பின் தேடப்பட்ட பெண் உடல் மீட்பு
-
எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும்: திமுகவுக்கு காங். எம்பி மாணிக்கம் தாக்கூர் பதில்