எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும்: திமுகவுக்கு காங். எம்பி மாணிக்கம் தாக்கூர் பதில்
சென்னை: காங்கிரஸை மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ தளபதி விமர்சித்த நிலையில், 'எங்களுக்கும் திருப்பி அடிக்கத் தெரியும்' என்று, எம்.பி., மாணிக்கம் தாக்கூர் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் மாணிக்கம் தாக்கூர் கூறியதாவது: மதுரை வடக்கு காங்கிரஸ் தொடர்ந்து பலமாக இருக்கும் தொகுதி. பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும். பார்லிமென்ட் நடப்பதால் என்னால் வரமுடியவில்லை. வரும் 13ம் தேதிக்கு பிறகு அந்த தொகுதியில் பூத் கமிட்டி கூட்டம் போடுவோம். காங்கிரஸ் கட்சியின் பலத்தை காட்டுவோம்.
சும்மா விட்டு விட்டு போய்விடுவோம் என்று நினைக்கிறீர்களா? சும்மா பார்த்துவிட்டு திரும்பி போவதற்கு காங்கிரஸ்காரர்கள் ஒன்னும் வந்தே மாதரம் ஜே என்று மட்டும் சொல்வோம் என்பது மட்டும் கிடையாது. எங்களுக்கும் திருப்பி அடிக்கத்தெரியும். தேர்தல் அறிவிக்கட்டும், கூட்டணி பேசட்டும். தொகுதி பங்கீடு வரட்டும். மதுரை வடக்கு தொகுதியை கட்டாயம் கேட்போம். இவ்வாறு மாணிக்கம் தாக்கூர் கூறினார்.
@block_P@
கூட்டணி அரசியலின் மாண்பை மிதித்து, பொது மேடையில் காங்கிரஸ் பேரியக்கத்தையும், காங்கிரஸ் பார்லிமென்ட் எம்பிக்களையும் இழிவுபடுத்திப் பேசிய திமுக எம்எல்ஏ கோ.தளபதி மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். இந்த கோரிக்கையை ஏற்க வேண்டும் என காத்து இருப்பதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
block_P
திமுக எம்எல்ஏ சொன்னது என்ன?
காங்கிரஸ் கட்சிக்கு வார்டில் பூத் கமிட்டி போடக் கூட ஆளில்லை என மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ தளபதி காட்டமாக விமர்சித்து இருந்தார். தற்போது எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும் என மாணிக்கம் தாக்கூர் பதிலடி கொடுத்துள்ளார்.
படியுங்கள்!
திமுக எம்எல்ஏ தளபதி காங்கிரஸை விமர்சித்தது தொடர்பாக தினமலர் இணையத்தில் செய்தி வெளியாகி இருந்தது.
படிக்க இங்கே கிளிக் செய்யவும்
திருமாவை கேளு, தாக்கூர் தமிழனே இல்லைனு சொல்லுவார், நீ என்னமோ பீதிக்கிற
ரிமோட் வேற எங்கேயோ இருக்கு
அடடா இந்த கழைக்கூத்தாடிகாரன் மாயாஜால வித்தை தந்திரக் காட்சி காட்டுபவர் இதோ பாம்பையும் கீரியையும் சண்டை போட விடப்போகிறேன் எல்லோரும் ஜோரா கைதட்டுங்க என்று சொல்லி சொல்லி வேடிக்கை பார்க்க வரும் கூட்டத்தை தக்க வைத்து சில்லறையை பார்த்து விடுவான் .ஆனால் கடேசி வரை பாம்பும் கீரியும் ஒன்றை ஓன்று பார்க்க கூட விடாமல் ஆட்டத்தை முடித்து மூட்டை கட்டி விடுவான் .அது போல பேச்சு பேச்சாகத்தான் இருக்குதே தவிர ஒருத்தர் சட்டை கூட கிழியவில்லை .இது ஒரு அழுகுணி ஆட்டம்
ஒரு புருஷன் பொண்டாட்டி சண்டைக்கு இத்தனை கருத்துக்களா . பகல்ல அடிச்சுக்குவாங்க இராத்திரி கூடிக்குவாங்க
மானம் ரோஷம் உள்ளவர்கள் MP பதவியை ராஜினாமா செய்துவிட்டு
மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்
நீ எல்லாம் தனித்து நின்று டெபாசிட் கூட வாங்கமாட்ட, இப்ப ஓவரா கூவுறா
அடிங்கடா நல்லா அடிச்சு விடுங்கடா கொல்லை அடிச்சீங்க இல்ல இப்போ அடிச்சிகோங்க பொறம் போக்குகளா.
"திருப்பி அடிப்பது" என்றால் என்ன ? "திமுக அடித்த கொள்ளைப்பணத்தை , அவர்களிடம் இருந்து திருப்பி அடிப்பது" என பொருள் கொள்க . ஆனால் இது முடியாத காரியம் . திமுக காரனாவது பணத்தை கொள்ளை கொடுப்பதாவது ? ஒவ்வொருவனும் பக்கா கேடிகள்
திருப்பி அடிப்பபீர்களா. ஒரு விளையாட்டு பொம்மையை நம்பி இந்தியாவில் எல்லா தேர்தலிலும் செருப்படி வாங்கி கொண்டிருக்கிறீர்கள். ஏதோ பல முறை கலைஞர் சொற்படி நடந்து மத்தியில் மந்திரி பதவி அளித்ததற்கு நன்றி கடனாக உங்களை தமிழ் நாட்டில் இன்னும் வாழவைத்து கொண்டிருக்கிறோம். எங்களுக்கு அடங்கி போக வேண்டிய நீங்கள் எங்களை அடிப்பிற்களா. நாங்கள் மனது வைத்தால் தற்போதுள்ள ஒபிஎஸ் நிலைக்கு ஆளாவீர்கள் ஜாக்கிரதை. ஸ்டாலின் அவர்கள் மைண்ட் வாய்ஸ் இப்படி இருக்குமோ.
நல்ல சமயம். காங்கிரஸ் தனித்து நின்று வெற்றி காண சமயம் வந்துள்ளது. டெல்லி தலைமையிடம் சொல்லுங்கள் தலைவரே. காங்கிரஸ் வீரம் மிகந்த தொண்டர்கள் உள்ளோம்மேலும்
-
சபரிமலை பக்தர்களிடம் கட்டணம் : வசூலிக்க கருத்து கேட்கும் ஐகோர்ட்
-
பிப்., 8 ல் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா; பட்டதாரி ஆசிரியர் கழகம் புறக்கணிக்க முடிவு
-
தமிழக போலீசார் என்ன செய்கின்றனர்: மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
-
பிப்.1ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் காசா எல்லை; இஸ்ரேல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவை முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உண்பார்களா? நயினார் கேள்வி
-
வங்கதேச தேர்தலுக்கு முன் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை