இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு; அச்சப்பட வேண்டாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்
புதுடில்லி: இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், பயணக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கத் தேவையில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
வவ்வால் மற்றும் பன்றி உள்ளிட்ட விலங்குகளால் பரவும் நிபா வைரஸால், காய்ச்சல், தலைவலி, சுவாசப் பிரச்னைகள் மற்றும் மூளை வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். தற்போது, இந்தியாவில் இருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சீனா உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகள், இந்தியாவில் இருந்து வரும் பயணிகளை கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், பயணக் கட்டுப்பாடுகளோ, வர்த்தகக் கட்டுப்பாடுகளோ ஏதும் விதிக்கத் தேவையில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், நிபா வைரஸ் பாதிப்பு பெரிய அச்சுறுத்தல் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
On the outbreak of Covid -19: Al Jazeera: Racisim against China is wrong. On 2 cases of Nipah virus reported in India, which have been contained. Al Jazeera: It is Indias Nipah virus. Morals for China and labels for India. It is not about bias, but a deliberate targeting of India under the guise of journalism. This is Al Jazeera for you.
சமூகவலைத் தளங்களில்
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் காரனுக டி20 உலகக் கோப்பையை இந்தியா நடத்துவதைக் குறிவைத்து, நிபா வைரஸ் குறித்து அச்சத்தை விதைத்து தவறான தகவல்களைப் பரப்பி வர்றானுக. இதுவரை மேற்கு வங்கத்தில் மட்டும் 2 நிபா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன மேலும் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவரும் சுகாதாரப் பணியாளர்கள். நிபா வைரஸ் சாதாரண தொடர்பு, காற்று, நீர் அல்லது நன்கு சமைக்கப்பட்ட உணவு மூலம் பரவாது. இது கோவிட் 19 போல காற்றில் பரவக்கூடியது அல்ல. நிபா வைரஸால் நாடு தழுவிய நெருக்கடிகள் எதுவும் இல்லை என்பதே உண்மை.மேலும்
-
அஜித் பவார் துறைகளை கேட்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள்
-
ரஷ்யா தாக்குதல்களை நிறுத்த வேண்டும்; உக்ரைனுக்கு வருமாறு புடினுக்கு ஜெலன்ஸ்கி சவால்
-
ஜனநாயகன் படம் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தணிக்கை வாரியம் கேவியட் மனு
-
விளம்பர நாடகத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்; திமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்
-
தெளிவான அரசியல் நிலைப்பாடு கொண்டவர் ராகுல்: சொல்கிறார் சசி தரூர்
-
அசாமில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரும் வெளியேற்றப்படுவார்கள்: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி