டாடா உப்பு உற்பத்தி ஆலை ராமநாதபுரத்தில் அமைகிறது
சென்னை :ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தில், 515 கோடி ரூபாய் முதலீட்டில், சமையல் உப்பு உற்பத்தி செய்யும் ஆலையை, டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளது.
டாடா குழுமத்தை சேர்ந்த டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம், சோடா சாம்பல், சிலிக்கா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கிறது.
இந்நிறுவனம், வாலிநோக்கத்தில், ஐ.வி.எஸ்.டி., எனப்படும் அயோடைஸ்டு செய்யப்பட்ட உப்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
இந்த ஆலை ஆண்டுக்கு, 2.10 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யும் திறன் உடையதாக இருக்கும். இதற்காக, 515 கோடி ரூபாயை டாடா கெமிக்கல்ஸ் முதலீடு செய்ய உள்ளது. உப்பு உற்பத்தி ஆலையின் கட்டுமான பணிகளை விரைவில் துவக்கி, 36 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், 500க்கும் மேற் பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எஸ்ஐஆர் விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார் முதல்வர் மம்தா
-
வாழ்க்கையை பறித்த வீடியோ கேம்; 9வது மாடியில் இருந்து சகோதரிகள் 3 பேர் குதித்து தற்கொலை
-
தெரியாமல் அறியாமல் பேசுகிறார் விஜய்; இபிஎஸ் 'அட்டாக்' ஆரம்பம்
-
பார்லி விதிகளுக்குட்பட்டு பேசுங்கள்; ராகுலுக்கு புத்திமதி சொன்ன மத்திய அமைச்சர்
-
மேடை நாடகத்திற்கு மட்டும் சமூகநீதி; திமுகவுக்கு நயினார் கண்டனம்
-
வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு சிக்கல்; சிறப்பு குழு அமைத்து சுப்ரீம்கோர்ட் உத்தரவு
Advertisement
Advertisement