வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு சிக்கல்; சிறப்பு குழு அமைத்து சுப்ரீம்கோர்ட் உத்தரவு
புதுடில்லி: தொழிலதிபர் அனில் அம்பானியின் வங்கி மோசடி வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66. இவருக்கு சொந்தமான, 'ராகாஸ்' நிறுவனங்களுக்கு, 'யெஸ்' வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடனை சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ததாக, அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணையில், அனில் அம்பானி, 17,000 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக இரண்டு வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. வங்கி கணக்குகளில் தணிக்கை மேற்கொண்டதில், 'ரிலையன்ஸ்' நிறுவனம் வாங்கிய கடன் தொகையை, வேறு நோக்கங்களுக்கு தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது.
இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 04) சுப்ரீம்கோர்ட்டில் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மல்யா பாக்சி மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அனில் அம்பானியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்தி ஆஜராகி, ''நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் அனில் அம்பானி இந்தியாவை விட்டு வெளியேற மாட்டார்'' என உறுதி அளித்தார்.
இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''டில்லி ஐகோர்ட்டில் ஒரு நபர் தப்பி ஓடமாட்டார் என்று உறுதி அளித்து இருந்தார். ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார்'' என கூறி எதிர்த்தார். பின்னர்,''அனில் அம்பானியின் வங்கி மோசடி வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை அமலாக்கத்துறை அமைக்க வேண்டும்'' என சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
அணிலுக்கு அரசு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கவேண்டும். முகேஷ் அம்பானியும் துணைநிற்க வேண்டும். எல்லா தொழிலதிபருக்கு வரும் சரிவுதான் இது, மிகப்பெரிய சாம்ராஜ்யம் இது அதனால் அனைவர் பார்வையும் இவர்மீதே உள்ளது. மீண்டும் தொழிலை துவங்கினால் பல்லாயிரம் குடும்பங்கள் பயன்பெறும், மீண்டும் பழைய நிலை வந்தால் இந்த கடன் தொகை நேர்முகவரி மற்றும் மறைமுகவரி வரி மூலமே வந்துவிடும். பத்து ஆண்டுகள் அவரை முடக்கி வைத்ததால் அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு.
முகேஷ் ஒருவனால் மட்டுமே அகிலேஷை காப்பாற்ற முடியும்! இதை செய்தால் அம்பானி குடும்பம் தான் இந்தியாவின் நெ 1 பணக்கார்!
இவனாவது தப்பாமல் இருக்க பாஸ்போர்ட்டை முடக்குங்கள்?
2017 ல செஞ்ச மோசடிக்கு இனிமே எப்போ குழு அமைச்சு, விசாரிச்சு தீர்ப்பு சொல்லி... வெளங்கிடும்.மேலும்
-
சர்வதேச குத்துச்சண்டை: இந்தியா ஆதிக்கம்
-
பயமுறுத்தும் பனிப்பொழிவு: இந்திய வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை
-
வங்கதேசத்தினர் ஊடுருவல்: திருப்பூரில் 13 பேர் கைது
-
தங்கம் வென்றார் ஈஷா சிங்: ஆசிய துப்பாக்கி சுடுதலில்
-
நேபாளம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய மசோதா வாபஸ்; அரசு அறிவிப்பு
-
ஐசிசி., யு-19 உலகக்கோப்பை: இறுதி போட்டியில் இந்தியா