வங்கதேசத்தினர் ஊடுருவல்: திருப்பூரில் 13 பேர் கைது

6

திருப்பூர் : சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்க தேசத்தினர் 13 பேர், திருப்பூரில் ஒராண்டாக தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூரில், காலேஜ் ரோடு ரங்கநாதபுரம், எஸ்.பி., நகரில் வங்க தேசத்தினர் சிலர், ஓராண்டாக தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்வது தெரிந்தது. வேலம்பாளையம் போலீசார் சோதனை செய்த போது, யாசின் மியா, 26, நுாபுர் காட்டூன், 25, முகமது துகின், 40, முகமது இஸ்மாயில், 38, என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.


மேலும், நல்லுார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, முதலிபாளையம் மற்றும் விஜயாபுரத்தில் தங்கியிருந்த, 26 முதல் 38 வயது வரையிலான ஒன்பது பேரை கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'நகரில், மூன்று பகுதியில் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர்' என்றனர்.

Advertisement