கோடைகாலம் நெருங்கும் நிலையில் விற்பனைக்கு வந்த தர்பூசணி, முலாம்பழம்
கரூர்: கோடைகாலம் நெருங்கும் நிலையில், கரூரில் முலாம்பழம், தர்பூசணி பழங்கள்
விற்பனைக்கு குவிந்துள்ளன.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடைகாலமாகும். கரூர் மாவட்டத்தில், பனிப்பொழிவு குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் உடல் சூட்டை குறைக்கும் வகையில், தர்ப்பூசணி, முலாம்பழம் ஆகியவை, கரூரில் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன.
கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட், திருச்சி மற்றும் கோவை சாலைகளில், வேன்களில் முலாம்பழம் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, கரூர் பகுதி
களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள முலாம் பழம், ஒருகிலோ, 40 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதிகளில், கரூர் பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தர்பூசணி, ஒரு கிலோ, 30 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதை, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
மேலும்
-
ஆண்டுக்கு 3 சிலிண்டர், கல்விக்கடன் தள்ளுபடி, முதியோருக்கு ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம்; இபிஎஸ் வாக்குறுதி
-
பார்லி விதிகளுக்குட்பட்டு பேசுங்கள்; ராகுலுக்கு புத்திமதி சொன்ன மத்திய அமைச்சர்
-
மேடை நாடகத்திற்கு மட்டும் சமூகநீதி; திமுகவுக்கு நயினார் கண்டனம்
-
வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு சிக்கல்; சிறப்பு குழு அமைத்து சுப்ரீம்கோர்ட் உத்தரவு
-
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்; கேரள சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
-
முருகன் பாடலை இழிவு படுத்திய த.வெ.க.,வினர் நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ., நிர்வாகி மனு