2.5 கோடி பேரின் ஆதார் எண்கள் முடக்கம்: மோசடியை தடுக்க நடவடிக்கை

3

புதுடில்லி: நாடு முழுவதும் இறந்து போன 2.5 கோடிக்கும் மேற்பட்டவர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டு உள்ளதாக அதனை நிர்வகிக்கும் யுஐடிஏஐ அமைப்பு கூறியுள்ளது.


உலகளவில் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பாக ஆதார் உள்ளது.நாடு முழுவதும் 134 கோடிபேரிடம் ஆதார் உள்ளது. வங்கிக்கணக்கு துவங்குவது முதல் பான் கார்டு பெறுவது வரையிலும், அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் முக்கியமானதாக உள்ளது.


இந்நிலையில் ஆதார் பட்டியலின் துல்லியம் மற்றும் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் 2.5 கோடிக்கும் மேற்பட்டவர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டு உள்ளதாக யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு, ஒருவர் இறந்தால் அவரின் ஆதார் எண்களை முடக்குவது அவசியம்.


இதன் மூலம் மோசடி நடப்பதை தடுக்கவும், அந்த எண்ணை பயன்படுத்தி அரசின் நலத்திட்டங்களை தவறான முறையில் கிடைப்பதை தடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.

Advertisement