நடுவானில் துருக்கி விமானத்தில் தீ: பயணிகள் 236 பேர் தப்பினர்!
கோல்கட்டா: பயணிகள், ஊழியர்கள் என 236 பேருடன் சென்ற துருக்கி விமானத்தில் தீப்பற்றியதை தொடர்ந்து, கோல்கட்டா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கி துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் 236 பேருடன் புறப்பட்டது. காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட 4 நிமிடங்களில் அந்த விமானத்தின் வலதுபுறத்தில் இருந்த இன்ஜினில் தீப்பற்றி எரிவதை விமானி கவனித்து விட்டார்.
உடனடியாக ஒரு இன்ஜினை அணைத்துவிட்டு, மற்றொரு இன்ஜின் உதவிடன் கோல்கட்டா விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த 225 பயணிகள் மற்றும் 11 ஊழியர்கள் என மொத்தம் 236 பேரும் உயிர் தப்பினர்.
தற்போது அந்த விமானம் கோல்கட்டாவில் தொழில்நுட்பப் பரிசோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (1)
anonymous - ,
04 பிப்,2026 - 19:27 Report Abuse
டுரிக்கிகு தரை வழியாக இழுத்துச் செல்லட்டும். 0
0
Reply
மேலும்
-
சர்வதேச குத்துச்சண்டை: இந்தியா ஆதிக்கம்
-
பயமுறுத்தும் பனிப்பொழிவு: இந்திய வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை
-
வங்கதேசத்தினர் ஊடுருவல்: திருப்பூரில் 13 பேர் கைது
-
தங்கம் வென்றார் ஈஷா சிங்: ஆசிய துப்பாக்கி சுடுதலில்
-
நேபாளம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய மசோதா வாபஸ்; அரசு அறிவிப்பு
-
ஐசிசி., யு-19 உலகக்கோப்பை: இறுதி போட்டியில் இந்தியா
Advertisement
Advertisement