துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்டம்; ஐகோர்ட் தடையை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்டத்துக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பல்கலை துணைவேந்தர் நியமன அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து பறித்து, தானே எடுத்துக் கொள்ளும் வகையிலான சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, விபுல் பான்ஞ்சோலி ஆகியோர் முன் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவில், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வானது ஏன் இந்த சட்டங்களை தடுத்து நிறுத்த அவசரமாக செயல்பட்டது' என்று கேள்வி எழுப்பினர். அவர்கள் மேலும் கூறியதாவது;
தடை உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்னர், மாநில அரசுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த காரணத்திற்காகவே தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டு, புதிய விசாரணைக்காக இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான ஒரு அமர்வு முன்பு இந்த வழக்குகள் பட்டியலிடப்பட வேண்டும். வழக்கை 6 வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெறும் வரை, வேறு எந்த புதிய நியமனங்களை செய்ய மாட்டோம் என்று தமிழக அரசின் உறுதிமொழியையும் இங்கு பதிவு செய்கிறோம். மேலும், ஐகோர்ட் அமர்வானது இந்த வழக்கில் தெரிவித்த கருத்துகளையும் ரத்து செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
திராவிட கரை வேட்டி துணை வேந்தன்கள் இந்த மாநில பல்கலை.களுக்கு தேவையில்லை.. கல்வியாளர்கள் ஒழுக்கம் & ஊக்கமுள்ளவர்கள் மட்டுமே தேவை..ஞானசேகரத் துணைவர்கள் அல்ல.... அண்ணா நாமம் -பெரியார் பூமர் எல்லாம் எந்த பல்கலை.யின் வளாகத்திலும் கால் வைக்க விடக்கூடாது...
முதல்வர் பல்கலைக்கழக வேந்தராக இருக்க முடியாது. கூடாது என்பது கருணாநிதியின் உறுதியான வாதமாக இருந்தது. இப்போது ஸ்டாலின் அதற்கு நேரெதிர் நிலைப்பாட்டை எடுத்ததற்கு என்ன காரணம்? விளக்கட்டும் பார்ப்போம்.
தீர்ப்பு எப்படி வந்தாலும் கவலையில்லை அதுக்குள்ள இந்த திருட்டு திராவிட களவானிப் பயலுக ஆட்சி முடிந்து மூட்டை முடிச்சை கட்டியிருப்பானுக!
மொத்தத்தில் ஓரு மொக்கை ஆணை. 6 வாரத்துக்குள் தேர்தல் நன்னடத்தை விதி வந்துவிடும். பின் இந்த அரசு ஓரு காபந்து அரசு மட்டுமே. எதற்கும் தேர்தல் கமிஷனை அணுக வேண்டும்.
ஆறு வாரம் அதாவது ஒன்றரை மாதம். மார்ச் கடைசியில் தமிழக தேர்தல் அப்ப இதை வைத்து கல்லாகட்ட முடியாத விடியல். ஒரு சீட் 15 கோடியாம்
ஒரு நியமன்தித்திற்கு எவ்வளவு லஞ்சம் என்று நியமித்திருக்கலாம். கொள்ளியார்களிடம் பண மூட்டையை பாதுகாப்பாக ஒப்படையுங்கள்
கடந்த ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன் , லட்சுமிநாராயணன் அமர்வு, தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு விதித்திருந்ததை தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறதே...? உச்ச நீதிமன்றம், அத்துடன் அந்த தடையை ரத்து செய்திருக்கிறதே...? அப்ப இனிமேல் இப்படித்தான் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இருக்குமோ...? இது எப்படி இருக்கு...?
தீர்ப்பை சரியாகப் படியுங்கள்.௧ மிழக அரசின் பதில் இல்லாமல் வந்த தீர்ப்பு 2 விடுமுறைக் கால அமர்வு ஏன் உடனடி விசாரணை செய்தது என்பது தான் கேள்வியே இதை சரி செய்து மறு விசாரணை 45 நாட்களில் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் நடத்தும்.அதன் பின் உச்ச நீதி மன்றம் அதன் பின் நாடாளுமன்றம்.......மேலும்
-
சர்வதேச குத்துச்சண்டை: இந்தியா ஆதிக்கம்
-
பயமுறுத்தும் பனிப்பொழிவு: இந்திய வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை
-
வங்கதேசத்தினர் ஊடுருவல்: திருப்பூரில் 13 பேர் கைது
-
தங்கம் வென்றார் ஈஷா சிங்: ஆசிய துப்பாக்கி சுடுதலில்
-
நேபாளம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய மசோதா வாபஸ்; அரசு அறிவிப்பு
-
ஐசிசி., யு-19 உலகக்கோப்பை: இறுதி போட்டியில் இந்தியா