அரசு பள்ளியில் வண்ணங்கள் தின விழா

புதுச்சேரி: கொடாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மழலையர் மாணவர்களுக்கான எழுத்தறிவு மற்றும் எண்ணியல் கற்றல் மற்றும் வண்ணங்கள் தின விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியர் ரூபஸ் தலைமை தாங்கினார்.

ஆசிரியர் உமாமகேஸ்வரி வரவேற்றார். விழாவில் மாணவர்களுக்கு வண்ணங்கள் தொடர்பான எழுத்தறிவு நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் தனித்திறன்கைள வெளிப்படுத்தினர். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியை கயல்விழி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஓவிய ஆசிரியர் சம்பத் நீஸ் நன்றி கூறினார்.

Advertisement