வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜெ., சொத்துகள் ஏலம்: உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்
சென்னை : ' வருமான வரி பாக்கியை செலுத்தாவிட்டால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலத்தில் விடப்படும்' என , சென்னை உயர் நீதிமன்றத்தில் , வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில் , 13.69 கோடி ரூபாயை செலுத்தக் கோரி , அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு , கடந்த ஆகஸ்ட் பதினோராம் தேதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது . இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் , தீபா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது
இந்த வழக்கில், மற்றொரு வாரிசான தீபக்கும் சேர்க்கப்பட்டார். இந்த மனுவை நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வருமான வரித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் விடப்படும். 2026 ஜன.,31 வரை வட்டியுடன் சேர்த்து 9.17 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி உள்ளது ஜெயலலிதாவின் வாரிசான தீபக், தவணை முறையில் 1.12 கோடி ரூபாயை செலுத்தி உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை வரும் 18 ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஊழலை ஒழிக்க, கூட்டணி கட்சி அதிமுக மானம் காக்க பிஜேபி இந்த பணத்தை கட்ட வேண்டும்
இன்னுமா வசூலிக்க முடியல?
அந்த சொத்துக்களை, ஜெயலலிதாவின் அரசியல் எதிரி ஏலம் எடுத்து விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
முதலில் நீதிமன்ற வாரிசு சான்று, மற்றும் வருவாய் துறை வாரிசு சான்று மாறுபடும் போல் தெரிகிறது. சசி, தினகரன், எடப்பாடி போன்றோர்.. உயர ஏணியாக இருந்த ஜெயா இறந்தும் எட்டி உதைக்க பட்டுவிட்டார். அரசியல், அருகில் உள்ளோர் உறவு வேறு. சமூக உறவு வேறு. வனத்தில் மேய்ந்தாலும் இனத்துடன் வந்து சேர் என்பர். தீபா கடைசி காலத்தில் பராமரித்து இறுதி சடங்கு செய்து இருந்தால், சமூக அமைப்பில் சொத்து ஒப்படைக்க படுவதுண்டு. அண்ணா திமுக வருமான வரி பாக்கி கட்டி மன்ற தீர்வு வாங்கி கட்சிக்கு உபயோக படுத்தலாம். திராவிட கூட்டம் என்ன சதி திட்டத்தில் உள்ளதோ?
aidmk is not holy either. only a lesser evil. except for seeman no party is promising a corruption free govt but no way he is going to get majority. god save tamilnadu.
சீமான் தலைகீழாக நின்றாலும் லஞ்சத்தை ஒழிக்க முடியாது. குறைக்கலாம். அவ்வளவுதான்
எந்த வேலைக்கும் போகாமல் எந்த தொழில் வ்யாபாரமும் செய்யாமல் , சீமான் எப்படி வீடு நிலம் வண்டி ஆள் அம்பு படை வைத்துள்ளார்.எல்லாரும் வேறு வழியில் சம்பாதிக்கிறார்கள்.யாரும் விதி விலக்கல்ல.மேலும்
-
'டாஸ்மாக்' ஊழியர்க்கு ஆதரவு பிப்., 11ல் அ.தி.மு.க., பேரணி
-
'பேரு வச்சியே... சோறு வச்சியா' ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் நிலை குறித்து அன்புமணி விமர்சனம்
-
தேர்தல் அறிக்கைக்கு கருத்து கேட்கும் விஜய்
-
'டாஸ்மாக்' பணியாளர்களுடன் அமைச்சர் நடத்திய பேச்சு தோல்வி
-
ஜெ., சொத்துக்கள் ஏலம் விடப்படும் ஐகோர்ட்டில் வரித்துறை தகவல்
-
கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு