இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்தாகும்; பியுஷ் கோயல் தகவல்
புதுடில்லி: இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் மத்தியில் கையெழுத்தாகும் என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.
இது குறித்து நிருபர்களிடம் பியுஷ் கோயல் கூறியதாவது: இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் குறித்த கூட்டறிக்கையை 4-5 நாட்களில் இறுதி செய்து கையெழுத்தாக வாய்ப்புள்ளது. அந்த அறிக்கை கையெழுத்திடப்பட்டதும், அது ஒரு சட்டப்பூர்வ ஒப்பந்தமாக மாற்றப்படும்.
கூட்டறிக்கை கையெழுத்திடப்பட்ட பிறகு, இந்தியாவுக்கான வரிகளை 18 சதவீதமாகக் குறைப்பது குறித்த நிர்வாக உத்தரவை அமெரிக்கா வெளியிடும். சட்டப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திடுவது, சில அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை இந்தியா குறைப்பதற்கு வழிவகுக்கும். இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் மத்தியில் கையெழுத்தாகும். இவ்வாறு பியுஷ் கோயல் கூறினார்.
எதுக்குண்ணே மார்ச், ஏபரல்னுட்டு. 2047 ல் கையெழுத்தாகும்னு ஒரே போடா போட்ருங்க.மேலும்
-
ஆமைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
-
மாயமான கோப்புகளை தேடி தர போக்குவரத்து அதிகாரிக்கு 'கெடு'
-
எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்
-
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் எதிர்ப்பு
-
துபாயில் உறுப்பு தானம் காரங்காட்டில் உடல் அடக்கம்
-
தபால் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு