துபாயில் உறுப்பு தானம் காரங்காட்டில் உடல் அடக்கம்
திருவாடானை: துபாயில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் அங்கு தானம் செய்யப்பட்ட பின் உடல் ராமநாதபுரம் மாவட்டம் காரங்காட்டிற்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
தொண்டி காரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கோல் கனிஷ்டன் 32. திருமணம் ஆகவில்லை. துபாயில் டிரைவராக வேலை பார்த்தார். சில மாதங்களுக்கு முன் விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். காரங்காட்டில் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் சம்மதித்தனர். அதன்படி, துபாயிலேயே அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அனைத்து சட்ட நடைமுறைகளும் நிறைவடைந்த நிலையில் செங்கோல் கனிஷ்டனின் உடல் நேற்று காலை துபாயிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான காரங்காடு கிராமத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்யப்பட்டது. காரங்காடு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும்
-
சேர்ந்து வாழ வர மறுத்த மனைவியை பயமுறுத்த நாட்டு வெடிகுண்டு வீசிய கணவன், நண்பர் கைது 'யு டியூப்' பார்த்து தயாரித்தது அம்பலம்
-
பள்ளிப்பட்டில் தொடர்ந்து பலியாகும் காகங்கள்
-
அந்தியோதயா ரயில் இன்ஜின் கோளாறு சென்னை ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம்
-
கல்லுாரி மாணவர்கள் போதை விழிப்புணர்வு
-
அங்கன்வாடிகளுக்கு கோடை விடுமுறை 2026 மே அமலாகிறது
-
'கல்தார்' வேதி மருந்தால் வாழ்நாட்களை இழக்கும் மா மரங்கள் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை எச்சரிக்கை