குளிர்கால ஒலிம்பிக் துவக்கம்
மிலன்: குளிர்கால ஒலிம்பிக் இன்று இத்தாலியின் மிலனில் துவங்குகிறது.
சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் கடந்த 1924 முதல் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு நடத்தப்படுகிறது. இதன் 25வது சீசன் இன்று, இத்தாலியின் மிலன், கார்டினா நகரில் துவங்குகிறது. 92 நாடுகளின் 1533 வீரர், 1338 வீராங்கனைகள் என மொத்தம் 2,871 பேர் பங்கேற்கின்றனர்.
ஐஸ் ஹாக்கி, ஸ்பீடு ஸ்கேட்டிங், பிகர் ஸ்கேட்டிங், கர்லிங், பனிச்சறுக்கு உட்பட 8 விளையாடுகளில் 116 பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளன. இதற்கான துவக்க விழா இன்று மிலனில் உள்ள சான் சிரோ ஒலிம்பிக் மைதானத்தில் நடக்கிறது. 75,000 பேர் நேரில் கண்டு ரசிக்க உள்ளனர்.
இந்தியா சார்பில் ஆரிப் கான் (ஆல்பின் பனிச்சறுக்கு), ஸ்டான்ஜின் லுண்டப் (கிராஸ் கன்ட்ரி பனிச்சறுக்கு) என இரண்டு வீரர்கள் மட்டும் பங்கேற்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement