மீன் விற்பனை சரிவால் மீனவர்கள் வேதனை

கரூர்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுாரில் கதவணை கட்டப்பட்-டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வரும் காவிரி நீரே கதவ-ணையில் செல்கிறது. இதில், 1.5 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்க முடியும். மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு, 8 மாதங்களுக்கு மேலாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மீன-வர்கள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று, மீன்கள் பிடித்து வந்-தனர். கதவணையில் தண்ணீர் இருப்பதால், மீன் வரத்து சீராக கிடைத்தது. பின்னர், கட்டளை மேட்டு வாய்க்கால் கரையில் வைத்து, மீன்களை விற்பனை செய்தனர்.கடந்த, ஜன., 28 முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்-பட்டுள்ளது. இதனால் மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து சரிந்-தது. இருப்பினும் கதவணையில் தேங்கியுள்ள தண்ணீரில், மீன் பிடித்து வருகின்றனர். கடந்த, வாரம் கிலோ, 150 ரூபாய்க்கு விற்ற ஜிலேப்பி மீன்கள் நேற்று, 100 ரூபாய்க்கு விற்பனையா-னது. கெண்டை மீன், 50 ரூபாய்க்கு விற்பனையானது. விடு-முறை தினங்களில் மட்டுமே விற்பனை கூடுதலாக இருக்கும்.

Advertisement