அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் நடந்த நடன நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீசார்
பள்ளிப்பாளையம்: வெடியரசம்பாளையம் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பள்ளிப்பாளையம் அருகே வெடியரசம்பாளையம் பகுதியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு ஆடல், பாடல் நிகழ்ச்சி துவங்கி நடந்து வந்தது. நிகழ்ச்சிக்கு, இரவு, 10:00க்கு மேல் அனுமதி இல்லை என
ஏற்கனவே போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். இரவு 7:00 மணிக்கு துவங்கிய நடன நிகழ்ச்சி, இரவு 10:00 மணிக்கு மேலும் தொடர்ந்து நடந்தது. பள்ளிப்பாளையம் டி.எஸ்.பி., கவுதம், பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார், ஆடல் பாடல் நிகழ்ச்சியை நிறுத்த உத்தரவிட்டனர்.
ஆனால், அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பட்டாளர் சிலர், 'எவ்வித பிரச்னையும் இல்லாமல் அமைதியாக ஆடல் பாடல் நிகழ்ச்சி நடக்கிறது' என, தெரிவித்தனர். போலீசார், தொடர்ந்து நிகழ்ச்சி நடந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து நடன நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
மேலும்
-
எதிர்க்கட்சிகளால் 19 மணி நேரம் 'வேஸ்ட்': லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா விரக்தி
-
பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக கர்ப்பத்தை தொடர நிர்ப்பந்திக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
-
த.வெ.க.,விலிருந்து காங்.,குக்கு.. இறுதி கெடு ; 70 தொகுதிகள், துணை முதல்வர், ஆறு அமைச்சர்கள்
-
தகவல் சுரங்கம்:சில்குரி காரிடரின் முக்கியத்துவம்
-
அறிவியல் ஆயிரம்:நிலவில் அணுமின் நிலையம்
-
திருப்பதி லட்டுகளில் குளியலறை ரசாயனங்கள்: ஒய்.எஸ்.ஆர்.காங்., மீது சந்திரபாபு 'பகீர்'