பஞ்சாப்பில் ஆம்ஆத்மி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
ஜலந்தர்: பஞ்சாப்பில் குருத்வாராவில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த ஆம் ஆத்மி தலைவர் லக்கி ஓபராய் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி தலைவர் லக்கி ஓபராய், சுமார் 8 மணியளவில் ஜலந்தரின் மாடர்ன் டவுனில் உள்ள குருத்வாராவில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்துள்ளார். பின்னர், தன்னுடைய ஜீப்பில் ஏறி அங்கிருந்த புறப்பட்ட போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சுமார் 8 முதல் 10 முறை சுடப்பட்டதில், ஜீப்பின் கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த லக்கி ஓபராய் மீது குண்டுகள் பாய்ந்தன.
இதையடுத்து, அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த ஓபராயை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் அமிர்தசரஸில் ஆம்ஆத்மி பஞ்சாயத்து தலைவர் ஜர்மல் சிங், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சூழலில், பட்டப்பகலில் ஆம்ஆத்மி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பில் மட்டும் கடந்த 4 மாதங்களில் மட்டும் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (4)
அப்பாவி - ,
06 பிப்,2026 - 19:51 Report Abuse
வேற எதால சுட்டு கொலை செய்வாங்க? 0
0
Reply
bmk1040 - Chennai,இந்தியா
06 பிப்,2026 - 12:30 Report Abuse
எந்தெந்ந அரசியல்வாதிகள் அம்ஆத்மி கட்சியின் பிரிவினை அரசியலுக்கு எதிராக இருக்கிறார்களோ அவர்கள் காலிஸ்தான் தீவிரவாதிகளின் ஆட்களால் கொலை செய்யப்படுகிறார்கள்.பஞ்சாப் அரசாங்கம் வேணழடுமன்றே வேடிக்கை பார்க்கிறார்களா? 0
0
Reply
Tiruchanur - New Castle,இந்தியா
06 பிப்,2026 - 10:52 Report Abuse
எல்லாத்துலயும் சட்டம் ஒழுங்கு தறி கெட்டு போயிருக்கு 0
0
Reply
Field Marshal - Redmond,இந்தியா
06 பிப்,2026 - 10:13 Report Abuse
குருதுவாராக்களில் ஸ்வாமி தரிசனம் கிடையாது புனித க்ரந்த நூலுக்கு தான் மரியாதை 0
0
Reply
மேலும்
-
வரும் 17ம் தேதிக்குள் கூட்டணி முடிவு: பிரேமலதா இறுதி நம்பிக்கை
-
யு19 உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அசத்தல்: 6வது முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை
-
ஒபாமாவை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட டிரம்ப்
-
திருமண விழாவில் நேருக்குநேர் சந்திப்பதை தவிர்த்த ராமதாஸ், அன்புமணி!
-
ஓயவே மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
-
10 ஆண்டுகளில் ரயில்வேயின் நிதி நிலை மேம்பட்டுள்ளது; பார்லியில் அஸ்வினி வைஸ்ணவ் தகவல்
Advertisement
Advertisement