திருமண விழாவில் நேருக்குநேர் சந்திப்பதை தவிர்த்த ராமதாஸ், அன்புமணி!
சென்னை: திருமண விழாவில் ஒன்றில் ராமதாஸ், அன்புமணி இருவரும் நேருக்குநேர் சந்திப்பதை தவிர்த்தனர்.
செங்கல்பட்டு; திருமண விழாவில் பங்கேற்ற ராமதாஸ், அன்புமணி இருவரும், நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்தனர்.
செங்கல்பட்டு அடுத்த, பழவேலி கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உறவினர் இல்ல திருமண விழா நடந்தது. இதில், ராமதாஸ் பங்கேற்று, திருமணத்தை நடத்தி வைத்தார்.
திருமணம் முடிந்து, ராமதாஸ் புறப்பட்டுச் சென்ற பின், பாமக தலைவர் அன்புமணி, அவரது மனைவி சவுமியா ஆகியோர் வந்தனர். திருமண விழாவில் அவர்கள் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தி விட்டுச் சென்றனர்.
பாமகவில், தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த திருமண விழாவிலும் அவர்கள் இருவரும் சந்திக்கவில்லை.
முன்னதாக, திருமண விழாவுக்கு வந்த ராமதாஸ் அளித்த பேட்டி:
பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நிச்சயமாக, எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும். மாம்பழம் சின்னம் எங்களுக்கு சொந்தமாகும்.
வரும் சட்டசபை தேர்தல் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக பேச்சு நடைபெறுகிறது. நாங்கள், யாருடன் கூட்டணி அமைப்போம் என்பது குறித்து, விரைவில் நல்ல செய்தி வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒன்றும் அவசரமில்லை ஜூன் மாதம் அறிவித்தால் போதும்.மேலும்
-
எதிர்க்கட்சிகளால் 19 மணி நேரம் 'வேஸ்ட்': லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா விரக்தி
-
பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக கர்ப்பத்தை தொடர நிர்ப்பந்திக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
-
த.வெ.க.,விலிருந்து காங்.,குக்கு.. இறுதி கெடு ; 70 தொகுதிகள், துணை முதல்வர், ஆறு அமைச்சர்கள்
-
தகவல் சுரங்கம்:சில்குரி காரிடரின் முக்கியத்துவம்
-
அறிவியல் ஆயிரம்:நிலவில் அணுமின் நிலையம்
-
திருப்பதி லட்டுகளில் குளியலறை ரசாயனங்கள்: ஒய்.எஸ்.ஆர்.காங்., மீது சந்திரபாபு 'பகீர்'