வரும் 17ம் தேதிக்குள் கூட்டணி முடிவு: பிரேமலதா இறுதி நம்பிக்கை
சென்னை: ''தே.மு.தி.க., யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற அறிவிப்பு, 17 ம் தேதிக்குள் முறைப்படி வெளியிடப்படும்'' என, அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
தே.மு.தி.க., சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம், விருப்ப மனு பெறும் பணி துவங்கியது. கோயம்பேடில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், விருப்ப மனு வினியோகத்தை துவக்கி வைத்து, பிரேமலதா கூறியதாவது:
தே.மு.தி.க., சார்பில் 234 தொகுதிகளிலும், போட்டியிட விரும்பும் கட்சியினரிடம், 12ம் தேதி வரை, விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. தே.மு.தி.க., கூட்டணியை அறிவிப்பதில், எந்த காலதாமதமும் இல்லை. தே.மு.தி.க., இடம்பெறும் கூட்டணி, இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றியை பெறும். யூகமான கேள்விகளுக்கு, நான் பதில் அளிப்பது கிடையாது.
வரும் 17 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை, இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது. அதற்குள் தே.மு.தி.க., கூட்டணி அறிவிப்பை முறைப்படி வெளியிடுவோம். யாருடன் கூட்டணி பேசுகிறோம் என்பதை சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (8)
thuppuravu - chennai,இந்தியா
06 பிப்,2026 - 23:25 Report Abuse
வியாபாரத்தில் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தால் வியாபாரம் உடனே முடியாது .காலம் தாழ்த்தித்தான் பார்க்கவேண்டும் .இப்போது இல்லையென்றாலும் அடுத்த தேர்தல் 2031 இல் முடிந்துவிடும் .பொறுத்திருந்து பாருங்கள் . 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
06 பிப்,2026 - 22:41 Report Abuse
இந்த அம்மா கோயாம்பேடு மார்க்கெட்டில் கறிகாய் விற்பது போன்றே தேர்தலில் நிற்பவர்களை தேடிக்கொண்டு இருக்கிறாங்க பாவம் கறிகாயும் கிடைக்கவில்லை தேர்தலில் நிற்க ஆளும் கிடைக்கவில்லை 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
06 பிப்,2026 - 22:40 Report Abuse
பீடி சிகரெட் விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியிட தடை செய்வதர்க்கு முன் ஊடகங்களில் ஒரு விளம்பரம் வரும் அதில்இந்த பீடியை இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை என்று வரும் அதுபோல இறுதிவரா இழுத்துவிட்டு ஒண்ணுமில்லாமல் போகப்போகுது. இவர்கள் தேறமாட்டார்கள் 0
0
Reply
Thravisham - Bangalorw,இந்தியா
06 பிப்,2026 - 22:01 Report Abuse
விஜய்காந்தையும் அவருடைய குடும்ப கட்சியையும் சிஸ்டமேடிக்காக நாசம் செய்தது இந்த புண்யவதிதான். ஒரு கொள்கையோ தொண்டர்களோ இல்லா அந்த கட்சியை மதில் மேல் பூனை கட்சியாக மாற்றயதில் இவருடைய பங்கு வெகு அபாரம். 0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
06 பிப்,2026 - 21:27 Report Abuse
திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் இந்த கேப்டளை விளையாட்டுக்கு சேர்த்துக்கொள்ளாமல் உதறிவிட்டால் அடுத்த பஞ்சாயத்து தேர்தலில் இவர் கூடாரம் காலியாகிவிடும். வர வர இவர் தொல்லை தாங்க முடியவில்லை. 0
0
Reply
mohana sundaram - ,
06 பிப்,2026 - 21:18 Report Abuse
பேராசை 0
0
Reply
ஆரூர் ரங் - ,
06 பிப்,2026 - 21:14 Report Abuse
பேராசை பெருநஷ்டம். கூட்டணிக் கனவு புஸ். 0
0
Reply
Jagan (Proud Sangi ) - Chennai,இந்தியா
06 பிப்,2026 - 20:56 Report Abuse
இந்த அம்மா நடத்துவது வெறும் பண "பேரம்". அரசியல் "கூட்டணி" என்று ஒரு புண்ணாகும் இல்லை. இந்த தேர்தலில் NDA விற்கு இவர்களின் மொழி சிறுபான்மை தெலுங்கு வோட்டுகளால் பாதிப்பு ஏற்பட்டால் , ஆண்டாள் அழகர் கல்லூரியை அரசுடைமைக்க வேண்டும் இரவர்களிடம் இருந்து பிடுங்க வேண்டும் 0
0
Reply
மேலும்
-
எதிர்க்கட்சிகளால் 19 மணி நேரம் 'வேஸ்ட்': லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா விரக்தி
-
பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக கர்ப்பத்தை தொடர நிர்ப்பந்திக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
-
த.வெ.க.,விலிருந்து காங்.,குக்கு.. இறுதி கெடு ; 70 தொகுதிகள், துணை முதல்வர், ஆறு அமைச்சர்கள்
-
தகவல் சுரங்கம்:சில்குரி காரிடரின் முக்கியத்துவம்
-
அறிவியல் ஆயிரம்:நிலவில் அணுமின் நிலையம்
-
திருப்பதி லட்டுகளில் குளியலறை ரசாயனங்கள்: ஒய்.எஸ்.ஆர்.காங்., மீது சந்திரபாபு 'பகீர்'
Advertisement
Advertisement