இறந்த பறவையை தொடக்கூடாது பறவை காய்ச்சலால் எச்சரிக்கை
மேட்டுப்பாளையம்: கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
கோவை ஊரக பகுதிகளில் உள்ள கோழி பண்ணைகள் அலர்ட் செய்யப்பட்டுள்ளன. காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, அன்னூர், துடியலூரில் கால்நடை மருத்துவர்கள் பண்ணைகளுக்கு சென்று கிருமிநாசினி தெளித்தல், நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அறிவுரை வழங்குகின்றனர். வாத்துகளுக்கும் ரத்த மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் கார்த்திக் மகாராஜா, இறந்து கிடக்கும் பறவைகளை வெறும் கைகளால் தொடக்கூடாது. உடனடியாக உள்ளாட்சிக்கு தகவல் சொல்லி அப்புறப்படுத்த வேண்டும்.
காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி வந்தால் மருத்துவமனைக்கு வர வேண்டும். சுய மருத்துவம் கூடாது. பழங்களை நன்கு கழுவி உண்ண வேண்டும் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிப்ரவரி 17ல் தாக்கல் ஆகிறது தமிழக இடைக்கால பட்ஜெட்
-
வரும் 5 மாநில தேர்தலிலும் தேஜ கூட்டணி வெற்றி பெறும்: எல்.முருகன் திட்டவட்டம்
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்; பஸ் மீது லாரி மோதியதில் 6 பேர் பலி
-
அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம்: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி
-
தங்கம், வெள்ளி விலை உயர்வு; சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரிப்பு
-
கும்பாபிஷேக விழா முகூர்த்த கால் நடுதல்
Advertisement
Advertisement