கும்பாபிஷேக விழா முகூர்த்த கால் நடுதல்

குளித்தலை: குளித்தலை அடுத்த அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. மலை உச்சியில் சிறும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று காலை 9:00 மணியளவில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.


இதில் கால சந்தி கட்டளை, உச்சி கால கட்டளை, சாய் ரட்ச கட்டளை, பன்னிரண்டாம் சமூகம் மற்றும் மூன்று மந்தை 84 கிராம சமுதாயம் கட்டளையினர் கலந்து கொண்டனர். முன்னாள் அறங்காவல் குழு தலைவர் கரூர் முருககணபதி, கோவில் செயல் அலுவலர் தங்கராஜ், ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழா வரும் 22 காலை 9:00 மணியளவில் நடைபெறும் என கோவில் செயல் அலுவலர் தங்கராஜ் தெரிவித்தார்.

Advertisement