தை வெள்ளியை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம்

கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், தை மாத வெள்ளியையொட்டி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் நேற்று நடந்தது.


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், தை மாத வெள்ளியையொட்டி, மூலவர் சுக்ரவார அம்பாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது.


தொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில், மூலவர் சுக்ரவார அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிறகு, கோவில் பிரகாரத்தில் அம்பாள் வீதி உலா நடந்தது. தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement