ஹரியானா கண்காட்சியில் ராட்டினம் சரிந்தது; மீட்பு பணியில் போலீஸ் அதிகாரி பலி
பரிதாபாத்: ஹரியானாவில் கண்காட்சியின் ராட்டினம் சரிந்து விபத்துக்குள்ளானதில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியானார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ஹரியானாவில் சூரஜ்குன்ட் கண்காட்சியில் ராட்சத ராட்டினம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ராட்டினத்தில் கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள் ஏறி மகிழ்ச்சியுடன் விளையாடினர். ராட்டினமும் தலைகீழாக சுற்றிக் கொண்டு இருந்தது.
அப்போது அந்த ராட்சத ராட்டினம் எதிர்பாராதவிதமாக சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது அங்கு பணியில் இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜக்தீஷ் பிரசாத் என்பவர் ராட்டின இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் முயற்சியில் இறங்கினார்.
ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் படுகாயம் அடைந்தார். அவரை அங்குள்ளோர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் ராட்டினத்தில் இருந்தவர்களில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
முன்னதாக, இதே கண்காட்சி திடலின் 2வது வாயில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் குழந்தை உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
மேலும்
-
அடுத்த 10 ஆண்டுக்குள் நிலவில் நகரம்; எலான் மஸ்க் நம்பிக்கை
-
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்: எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு
-
டில்லியில் பார்லிமென்ட், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை அதிகரிப்பு; சவரனுக்கு ரூ.1,840 உயர்வு
-
தேர்தலில் வெற்றி பெற்ற ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு
-
தெற்கு சூடானில் ஒரு கோடி பேர் பாதிப்பு; தாக்குதலை கைவிடுமாறு ராணுவத்திற்கு ஐநா கோரிக்கை