திமுகவுக்கு கூட்டணி கட்சிகள் குடைச்சல் கொடுப்பதால் சர்ச்சை
சென்னை: 'பா.ம.க.,வை கூட்டணியில் சேர்த்தால், நான் வெளியேறுவேன்' என்று வி.சி., தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார். 'தி.மு.க., கூட்டணியில், தங்களுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என, ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா, பொதுவெளியில் வலியுறுத்தி உள்ளார். கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றும், தி.மு.க.,வுக்கு குடைச்சல் கொடுப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பனிப்போர்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இம்முறை தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி உருவாகி உள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., தங்கள் கூட்டணியில் சிறிய கட்சிகளை சேர்க்க காய் நகர்த்தி வருகின்றன. இதற்கிடையில், தி.மு.க., கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாக பனிப்போர் நீடித்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதி என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது; இது, தி.மு.க.வுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மற்ற கட்சிகளும் குடைச்சலை துவங்கி உள்ளன. நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு, வி.சி., தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: மதத்தின் அடிப்படையில், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை பா.ஜ., பரப்புகிறது. அதேபோல், ஜாதி அடிப்படையில், பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை பா.ம.க., பரப்பியது. சமூகங்களுக்கு இடையில் வெறுப்பை விதைத்து, பிரிவினையை ஏற்படுத்தி, நிலையான பகையை வளர்க்கக் கூடிய, இந்த இரண்டு கட்சிகளுடன், நாங்கள் எந்த காலத்திலும் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்.
அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. இந்த கட்சிகள் இடம் பெறும் கூட்டணியிலும் இடம் பெற மாட்டோம் என்ற முடிவை, ஏற்கனவே எடுத்துள்ளோம். அந்த முடிவை எடுக்கும் சுதந்திரமும், அதிகாரமும், எங்களுக்கு உள்ளது. ஆனால், தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுக்க, நாங்கள் ஒரு நாளும் விரும்பவில்லை. தி.மு.க., ஒரு முடிவை எடுத்தால், அது எங்கள் நிலைப்பாட்டுக்கு எதிராக இருந்தால், நாங்கள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதை தவிர, எங்களுக்கு வேறு வழி கிடையாது. இதுதான் எங்கள் நிலைப்பாடு. அதில், நாங்கள் எந்தவித சமரசமும் செய்யவில்லை.
அவ்வப்போது வரும் தேர்தலுக்காக, எங்கள் நிலைப்பாட்டை, நாங்கள் மாற்றிக் கொள்ள கூடாது. கருத்தியல் சார்ந்த பயணத்தில், நம்பகத்தன்மையை வளர்க்க வேண்டும். அதை எப்போதும் இழந்துவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில், நாங்கள் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மண்ணடியில், மனித நேய மக்கள் கட்சியின், 18ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. விழா முடிந்ததும் அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அளித்த பேட்டி: தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில், மக்கள் தொகை பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில், 14 முஸ்லிம்கள் எம்.எல்.ஏ.,க்களாக இருக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், ம.ம.க., இடம் பெற்றுள்ளது. கூட்டணியின் வெற்றிக்காக, ம.ம.க., தொண்டர்கள் அயராது பாடுபடுவர். இத்தேர்தலில் ம.ம.க.,வுக்கு ஐந்து தொகுதிகளை, தி.மு.க., ஒதுக்க வேண்டும்.
அதேபோல், கூட்டணியில் இடம் பெற்றுள்ள, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளில் உள்ள சிறுபான்மையினர்களுக்கு, உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். கூடுதல் தொகுதி கேட்பது, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கிடையாது. தேர்தல் நெருங்கும் நேரத்தில், அதிகமான தொகுதிகள் கேட்பது வழக்கமானதுதான். பா.ஜ.,வின் நெருக்கடியை சமாளிக்கும் முதல்வர் ஸ்டாலின், இதையும் சுமூகமாக கையாண்டு, வெற்றிக் கூட்டணியை அமைப்பார். இவ்வாறு அவர் கூறினர்.
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கேட்பதும், தி.மு.க., தொகுதி பங்கீடு குழு அமைக்காமல் மவுனம் காப்பதும், கூட்டணிக்குள் சர்ச்சையையும், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
2011 ல் பாமக, விசிக இரண்டுமே திமுக கூட்டணியில் இருந்தன ........
பல பேர் மேல் ஏறி உரி அடித்தவன் தானே பரிசுத் தொகையைய் எடுத்து கொண்டால் அவனை சுமந்தவர்கள் சும்மா விடுவார்களா? பங்கு கேட்கத்தான் செய்வார்கள்.
திமுக கூட்டணி என்பது ஒரு சொத்து மூட்டையில் கட்டப்பட்ட நூறு எலிகள்
வெளியே ஒண்ணும் தெரியலையானாலும் உள்ளடி பலமாக பட்டிருக்கும் போல. அடிமை ஓப்பனா அதை வெளியில் சொல்ல முடியல.
மத ரிதியாக வெறுப்பு அரசியல் பொறுப்பாண்மை சமூகம் இழிவு செய்து பேசி கொண்டு இருக்கார்
அப்போ பாமக கூட்டணியில் சேர்க்க வேண்டும்
காங்கிரஸ் விசிக பற்றி கேட்டால் பாஜக அதிமுக பற்றி பேசுகிறார். இதுவே இவர் பெட்டிக்கு பேசுகிறார்.
கூட்டணி என்பது தேர்தலை தனியாக எதிர்கொள்ள முடியாத காட்சிகள் ஒன்று சேர்ந்து கும்மியடித்து ஜெயிப்பது. தீம்க்கா சட்டப்புத்தகத்தில் சில வினோத விதிகள் உண்டு. உதாரணத்துக்கு ஆட்சியில் பங்கு கேட்கக்கூடாது.
ஆண்டுக்கு 30,000 கோடி அடித்தாலும் அதில் பங்கு கிடையாது- ஆனால் ஏராளமான நிபந்தனைகளுடன் தேர்தலுக்கு முன் பெட்டி ஒன்று மட்டும் கொடுக்கப்படும்.
அதில் சில்லரை காட்சிகள் அடங்குவர் - ஆனால் காங்கிரஸ் போன்ற கட்சிகள் முரண்டு பிடித்து அதிக இடங்களை மட்டும் வாங்க முயலும். இந்த முறை அப்பாவால் எத்தனை பேரை திருப்திப்படுத்த முடியம் என்று தெரியவில்லை.
பெரிய கொள்கை பிடிப்பு தலைவரை போல திருமா பேசுவது வேடிக்கை வினோதம். ராஜபக்ஷேவுடன் எந்த கொள்கை அடிப்படையில் கைகுலுக்கி பரிசு பெற்றுவந்தார் என்பதை போலத்தான் இவ்ரும் இவரது அரசியல் நிலைப்பாடும். சாதியை தூக்கிப்பிடித்து காலத்தை ஒட்டுகின்றார்கள். இதில் பாஜகவை நொள்ளை சொல்கின்றார்கள் அரசியல் காமெடிகள் இப்படித்தான் தொடர்கின்றது.
திருமாவின் நிலை அந்தோ பரிதாபமே. நிச்சயம் அவரால் திமுகவை விட்டு விலகவே முடியது. காரணம் அவரது கட்சியில் உள்ள ஒருவரை வைத்து கட்சியை பிளக்கவும் திமுக ஆயத்தவேலையை தயாராக வைத்துள்ளது.
அந்த நபர் மீதான கொலைவழக்கு தண்டனையை நிறுத்திவைத்துள்ள நிலையில் அதனை வைத்து அவர் மூலம் திருமாவுக்கு குடைச்சல் கொடுக்கவும் திமுக தலைமை திட்டம் தீட்டிவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றார்கள். ஆனாலும் பாமகவை கொண்டுவருவதற்கு பதிலாக தேமுதிகவை கொண்டுவரலாம் என்று துரை முருகன் போன்றோரின் ஆலோசனையையும் ஸ்டாலின் நிராகரிக்கவில்லை என்கிறார்கள்.
300 கோடி பற்றியெல்லாம் கூட கொடுக்க தயக்கமில்லை என்றாலும் தேமுதிகவின் 12 தொகுதி என்பதில்தான் இழுபறி நடக்கின்றது. இதனை பிற கட்சிகள் அதிலும் விசிகாவுக்கும் கமியூனிஸ்டுகளுக்கும் ஒப்புதல் இல்லை என்கிற குழப்பமும் தொடர்கின்றது. நேற்றுவரை நாங்கள் இருநூறு தொகுதிகளை சுலபமாக கைப்பற்றுவோம் என்று வீராப்பு பேசிய ஸ்டாலின் இப்போது கூட்டணியில் இன்னும் சில கட்சிகளை சேர்க்க துடிப்பது திமுக மீதான மக்களின் வெறுப்பை உளவுத்துறை கூறிவிட்டதால் வேறுவழியில்லாமல் திமுக தடுமாறுகின்றது.
இன்னும் சில வாரங்களில் அமைச்சர்கள் மீதான வழக்குகளும் சூடுபிடிக்கப்போவதால் திமுக அதிர்ச்சியில் உறைந்துபோய் எதை தின்றால் பித்தம் தெளியும் என்கிற ரேஞ்சில் கூப்பிட்டு கூப்பிட்டு கூட்டணிக்கு ஆள் சேர்கின்றது. தெளிவாக சொல்வது என்னவென்றால். எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் ஒற்றுமையாக அமைதியாக பிரச்சாரம் செய்தாலே போதும், மக்களுக்கு திமுக மீதுள்ள அதீதமான வெறுப்பு எதிர்கட்சிகளை மிக சுலபமாக வெற்றியடைய வைத்திடும். விஜையை பற்றி கவலையே வேண்டாம்..
அவரது கூட்டமானது மாயமாகப்போவது உறுதி. காரணம் ஏழரை கோடி மக்களிடையே அவருக்கு உள்ள செல்வாக்கானது வெறும் 7 சதவிகிதம்தான் என்கிறது செய்தி. சில ஊடகங்கள்தான் அவரை உசுப்பேத்திவிட்டு தனித்து நிற்க தூண்டிவிட்டது.
காங்கிரசுக்கு வலியச்சென்று அழைத்தும் பலனில்லை. அவரால் பிரிக்கப்படும் வாக்குகளால் திமுக இரட்டை எண்ணில் தொகுதிகளை பறிகொடுக்க போகிறது. திமுக வரலாற்றில் இரண்டாம் முறை வெற்றிபெற்றதே இல்லை என்கிற சாதனையை அது தக்கவைத்துக்கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை.மேலும்
-
அடுத்த 10 ஆண்டுக்குள் நிலவில் நகரம்; எலான் மஸ்க் நம்பிக்கை
-
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்: எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு
-
டில்லியில் பார்லிமென்ட், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை அதிகரிப்பு; சவரனுக்கு ரூ.1,840 உயர்வு
-
தேர்தலில் வெற்றி பெற்ற ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு
-
தெற்கு சூடானில் ஒரு கோடி பேர் பாதிப்பு; தாக்குதலை கைவிடுமாறு ராணுவத்திற்கு ஐநா கோரிக்கை