வைகை அணையில் மீண்டும் நீர் திறப்பு

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக நேற்று காலை 8:00 மணிக்கு மீண்டும் நீர் திறந்து விடப்பட்டது.

வைகை அணையில் இருப்பில் உள்ள நீர் கடந்த சில மாதங்களாக 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது. அணையில் இருந்து கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் பிப்.6 ல் முறைப்பாசன அடிப்படையில் நிறுத்தப்பட்டது. நேற்று மீண்டும் வினாடிக்கு 600 கன அடி வீதம் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. அணை நீர்மட்டம் 46.06 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 71 அடி). நீர்வரத்து வினாடிக்கு 429 கன அடி.

Advertisement