எம்.எல்.ஏ., மீது வழக்கு

சிவகங்கை: சிவகங்கை சோலை நகரை சேர்ந்தவர் கார்த்திகை சாமி 53. இவர் காளையார்கோவில் போலீசில் அளித்த புகாரில் சிவகங்கை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்நாதன் அனுமதியின்றி காளையார்கோவில் - தொண்டி ரோட்டில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார்.

பெரியகோட்டையை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் சரவணனும் , அனுமதியின்றி சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் எதிரே போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார் என கூறியிருந்தார்.

எம்.எல்.ஏ., சரவணன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement