வட மாநில தொழிலாளர்களுக்கு துன்புறுத்தல்; அண்ணாமலை கண்டனம்
சென்னை: ஈரோடு மாவட்டம் கஞ்சிகோவில் பகுதியில் ஹோட்டலில் பணியாற்றிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளரை போலீசார் தாக்கிய சம்பவத்திற்கு பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை; சட்டத்தை நிலைநிறுத்துவதற்கே போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒருவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை மட்டுமே வைத்து, அவர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவோ, அவர்களை துன்புறுத்தவோ, அவமதிக்கவோ அல்லது தாக்கவோ போலீசாருக்கு எந்த உரிமையும் இல்லை.
ஊழல் நிறைந்த திமுக ஆட்சியில் மாநிலம் முழுதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உடல் ரீதியாகவும், மொழி ரீதியாகவும் அதிகளவில் துன்புறுத்தப்படுவதில் எந்த ஆச்சரியம் ஏதுமில்லை. தமிழகத்தின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுசெய்ய முடியாத பங்களிப்பை நாம் அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது.
மெட்ரோ ரயில் திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் முதல் குடியிருப்பு கட்டிடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சிறு உற்பத்தி நிறுவனங்கள் வரையிலான நமது பொருளாதார நடவடிக்கைகளின் ஒவ்வொரு தூணும் அவர்களின் உழைப்பைச் சார்ந்தே உள்ளன. எனவே, அவர்களுக்கான கண்ணியத்தை கொடுக்க மறுப்பது என்பது நமது வளர்ச்சியை நாமே சீர்குலைப்பதாகும்.
இதுபோன்ற சம்பவங்கள், அரசியல் லாபத்திற்காக திமுகவினரால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக பல ஆண்டுகளாக விதைக்கப்பட்ட வெறுப்பின் தவிர்க்க முடியாத செயல்களின் வெளிப்பாடு தான், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (22)
M Ramachandran - Chennai,இந்தியா
09 பிப்,2026 - 21:36 Report Abuse
திருடர்கள் ஆட்சியை முடிவிற்கு வருமா? வராது. பழனி அடுத்த பாய்மரம். பழனியால் துளிர் விட்டுடிச்சி. 0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
09 பிப்,2026 - 19:44 Report Abuse
இதே வடக்கன் பங்களாதேஷி என்றால் அப்ப மட்டும் விடியலுக்கு எப்படி மத சார்பின்மையாக இனிக்குது ?? 0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
09 பிப்,2026 - 19:42 Report Abuse
மைனாரிட்டி ஓட்டை வைத்து தான் திமுக இதுவரை ஜெயித்து வந்துள்ளது. ஆனால் வடமாநில ஒட்டு தற்போது மைனாரிட்டி ஓட்டை விட அதிகம். அதனால் அதுவே தோற்றுவிடும். 0
0
Reply
என்னத்த சொல்ல - chennai,இந்தியா
09 பிப்,2026 - 17:41 Report Abuse
சும்மா எதையாவது ஆதாரம் இல்லாமல் சொல்றது.. யாரை, எங்கே, எதற்க்காக அடித்தார்கள் என சொல்ல முடியாதா? சமீபத்தில், குழந்தை கடத்தலில் ஈடுபட்ட வடமாநிலத்தவரை பொதுமக்களே பிடித்து அடித்தார்கள். 0
0
Reply
P. SRINIVASAN - chennai,இந்தியா
09 பிப்,2026 - 17:37 Report Abuse
இவங்களுக்கு ஏதாச்சும் சொல்லி மக்கள் நிம்மதிக்கெடுக்கணும்... 0
0
vivek - ,
09 பிப்,2026 - 23:39Report Abuse
ஆமாம் சீனு உன் குடும்பம் டாஸ்மாக்கில் சந்தோஷமா இருக்காங்க 0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
09 பிப்,2026 - 17:31 Report Abuse
பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து தான் அதிக அளவில் தொழிலாளர் தமிழகம் வருகிறார்கள் அவர்களுக்கு சொந்த மாநிலத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க பாஜக அரசுக்கு திறன் இல்லாமையே காட்டுகிறது.ஆன்மீகத்தை வைத்து சுயலாபம் அடைந்தால் போதும் என்ற நிலையில் பாஜக உள்ளது என்று ஊடுக தரவுகளின் அடிப்படையில் மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள். 0
0
vivek - ,
09 பிப்,2026 - 18:42Report Abuse
இதோ வாடகை வாய் சிவநாயகம்...என்று மக்கள் மகிழ்ச்சியோடு சொல்கிறார்கள் 0
0
Yuvaraj Velumani - india,இந்தியா
09 பிப்,2026 - 20:08Report Abuse
அட இங்க இருக்கற கம்பெனில நீயா வேலை செய்யற 0
0
Reply
saravanan - ,இந்தியா
09 பிப்,2026 - 17:08 Report Abuse
இவங்களுக்கு வேலை இல்லை. வடமாநில தொழிலாளர் தாக்குதல், வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் என்று ஏதாவது ஊதிப் பெரிதாக்கி கலவர நோக்கில் அறிக்கை விடுவதே வேலையாகிவிட்டது பாஜக கட்சிக்கு. 0
0
Yuvaraj Velumani - india,இந்தியா
09 பிப்,2026 - 20:04Report Abuse
200 கொத்தடிமை 0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
09 பிப்,2026 - 16:41 Report Abuse
சவுதி அரேபியாவில் இது எவ்வளவு காலம் நடக்கப் போகிறது. இந்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த மக்களுக்கு விசா ஏற்பாடு செய்து செயல்படுத்தும் முகவர்களையும் கைது செய்ய வேண்டும். சவுதி 2016 ஐ நான் திரும்பி வந்துவிட்டேன் . ரியாத்தில் உள்ள எனது நிறுவனமும் தமிழ் கலாச்சார மையமும் நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு உணவு மற்றும் திரும்ப டிக்கெட்டுகளை வழங்கி உதவி செய்தோம். இன்னும் இது தொடர்கிறது. 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
09 பிப்,2026 - 15:35 Report Abuse
அண்ணாமலை பொஆன்று எந்த பா ஜா கீவினரும் இது மாதிரி ப்ரச்சன்னியக்கலை வெளி கொண்டு வருவதில்லை. பொதுவான பிரச்னைய்யகள் மட்டும் அதுவும் பட்டும் படாமலும் தான் பேசுவார்கள். 0
0
Reply
ஆரூர் ரங் - ,
09 பிப்,2026 - 15:34 Report Abuse
மதுராந்தகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தி.மு.க அமைச்சர் வடமாநில ஆட்கள் ஹிந்தி படித்ததால் இங்கு வந்து குப்பை சாக்கடை அள்ளும் பணியும் மேசை துடைக்கும், கட்டிடம் கட்டும் கூலி வேலைக்குதான் வருகிறார்கள் என கேலியாக பேசினார். அதே மதுராந்தகம் தொகுதி யின் எம்எல்ஏ வாக இருந்தவர் உகம்சந்த் என்ற ராஜஸ்தான் மார்வாடி. இருமுறையும் அவரிடம் படுதோல்வி கண்டது திமுகதான். 0
0
Reply
மேலும் 8 கருத்துக்கள்...
மேலும்
-
காஞ்சிபுரம் பட்டு சேலையில் ஜரிகையின் தரம் குறைகிறது; தங்கம், வெள்ளி விலை ஏற்றம் காரணம்
-
வனத்துறையிடம் தி.மு.க. வலியுறுத்தல்
-
வாக்காளர் பட்டியல்; பார்வையாளர் ஆய்வு
-
உடுமலை - திருப்பூருக்கு பஸ் வசதி குறைவு; நெரிசலில் பயணிக்கும் மக்கள்
-
கவுரவ விரிவுரையாளர்கள் தொடர் 'ஸ்டிரைக்' அரசை கண்டித்து நேற்று துவக்கம்
-
என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கு நடுநிலைப்பள்ளியில் பயிற்சி
Advertisement
Advertisement