முன்னாள் ராணுவ தளபதி எழுதிய புத்தகம் கசிவு: டில்லி போலீஸ் வழக்குப்பதிவு
புதுடில்லி: முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதி வெளியிடப்படாத புத்தகம் ஆன்லைனில் வெளியாகி உள்ளது தொடர்பாக டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி நரவானே, தனது பணிக்காலத்தில் ஏற்பட்ட அனுபவம் குறித்து ' Four Stars of Destiny' என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இது இன்னும் வெளியிடப்படவில்லை.
ஆனால், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல், இந்த புத்தகத்தில் உள்ளதாக கூறி சில விஷயங்கள் பற்றி பேசினார். சீனா உடனான மோதலின் போது மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து விமர்சித்து பேசினார். இதற்கு லோக்சபாவில் மத்திய அரசும், சபாநாயகரும் எதிர்ப்பு தெரிவிக்க அமளி ஏற்பட்டது. இதனால், லோக்சபா தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புத்தகம் இன்னும் வெளிவராத நிலையில் அது சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது குறித்து டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த புத்தகத்தின் பிடிஎப் பக்கங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் சில இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இது குறித்து டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை போட்டு, விற்பனைக்கு தயார் என்ற நிலையில் இணைய தளங்களில் காட்டி உள்ளனர். நிலைமையின் முக்கியத்துவம் கருதி வழக்குப்பதிவு செய்துள்ள டில்லி போலீசார் தனிப்பிரிவு அமைத்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
புத்தகம் வெளியான இடம், அதனை சமூகஊடகங்களில் பதிவேற்றம் செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ஆ வூ என்னா ஏதாவது நோட்டு புத்தகத்தை தூக்கி காட்டி மோடிஜீயை குறை சொல்வதை, பழி போடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளார். சின்ன சின்ன பசங்க எல்லாம் சிரிக்க ஆரம்பிச்சு விட்டனர். உலக அளவில் மோடிஜீ புகழ்பெறுவதை பொறுக்க முடியல்லே,
பாவம்... அவுரு உயிரோட இருந்தால் அவரே விளக்கம் சொல்லியிருப்பாரு. ஆக்சிடெண்ட் ஆயிருச்சு
உண்மை என்னிக்காவது வெளியே வரும்.
அப்போதும் திருந்தமாட்டான்
இராணுவத்தளபதி எழுதிய புத்தகதின் பகுதிகளை இராணுவ அமைச்சகத்தின் அனுமதியில்லாமல் வெளியிட்டது தவறு.
இந்த காங்கிரஸ் தேசத்துரோகிகளை நடுரோட்டில் வைத்து சுட்டு கொல்ல வேண்டும். காங்கிரஸ், திமுக போன்ற எதிர்க்கட்சிகளின் எம்பிகளை தேர்ந்தெடுத்த மக்கள் வெட்கப்படப்வேண்டும் வேதனைப்படவேண்டும்
உண்மை என்றாவது வெளி வந்தே தீரும் ...
வேற யாரு ராகுல் கூட்டங்கள்தான் அதை செய்துயிருக்கும்?
ராகுல்...உங்களது கான் கிராஸ் கட்சி ஆட்சியின் போது.... பாகிஸ்தான் ராணுவம் நமது இராணுவ வீரரின் தலையை வெட்டி எடுத்து சென்ற போதும் ......பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை நகரில் தாக்குதல் நடத்திய போதும் எதிர் தாக்குதல் நடத்த விடாமல் ராணுவத்தின் கைகளை கட்டி போட்டு இருந்தீர்கள் ..... ஆனால் இப்போதைய அரசு .....ராணுவத்துக்கு எது சரியென்று படுகிறதோ .... அதை செய்ய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருந்தார்கள்..
ஒவொரு ஆட்சியிலும் ஏதாவது ஒரு பின்னடைவு வருகிறது, இப்போ இந்த புத்தகதில் சீன படையெடுப்புக்கு என்ன தட்காப்பு செய்ய என்று பிரதமர் மோடி கேட்க அதுக்கு அவர் ஒரு பொறுப்பான பதில் தரவில்லை என்று சொல்லப்படுகிறது, பிரச்சனை பெரிதானால் தன் மீது பொறுப்புகூறனும் என்று நழுவிவிட்டதாக இராணுவ அதிகாரி அந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார். அதுதான் பிரச்சனை.
எதுக்கு படிச்ச மாதிரியே ரீல் விடுமேலும்
-
பாகுபாடின்றி தேர்பவனி நடத்த வழக்கு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
-
மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சலுகை அடையாள அட்டை வழங்கல் அரசு துறைகளில் தள்ளுபடி உண்டு
-
பைக் மீது கார் மோதல் கார்மென்ட்ஸ் ஓனர் பலி
-
ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வனத்துறை வாகன கட்டணம் ரூ.80 35 கி.மீ., துாரம் பஸ் வசதி ஏற்படுத்தாமல் மலைவாழ் மக்களை தண்டிக்கும் அரசு
-
ஐ20 எரா அறிமுகம் விலை ரூ. 74,000 குறைவு
-
தே.ஜ.கூட்டணி ஆர்ப்பாட்டம்