'ரஷ்ய கச்சா எண்ணெய் விற்பனையை தடுக்க சர்வதேச நாடுகளை மிரட்டும் அமெரிக்கா'
மாஸ்கோ: இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தடுப்பதற்காக, மிரட்டல் மற்றும் கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடுவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் நான்கு ஆண்டுகளை எட்டியுள்ளது. ரஷ்யாவின் நிதி ஆதாரத்தை முடக்கினால் போர் நின்று விடும் என கருதிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதன்படியே, இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்தார் அதிபர் டிரம்ப். இதில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்ட அபராத வரி, 25 சதவீதமும் அடங்கும். ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா படிப்படியாக குறைத்து வருகிறது. இதனால், அபராத வரியை ரத்து செய்த அமெரிக்கா, பரஸ்பர வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 ஆக குறைத்தது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று கூறியதாவது:
இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தடுக்கவே, மிரட்டல் மற்றும் கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. வரிகள், தடைகள் வாயிலாக உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கத்தை நிலைநாட்ட அந்நாடு முயற்சிக்கிறது.
மலிவான ரஷ்ய எரிபொருளை தடுத்து, அதிக விலையுள்ள அமெரிக்க எரிவாயுவை விற்க அந்நாடு முயற்சித்து வருகிறது. மேலும், 'பிரிக்ஸ்' நாடுகளின் வர்த்தகம், முதலீடு மற்றும் ராணுவ உறவுகளை கட்டுப்படுத்தவும் அமெரிக்கா முயல்கிறது. இந்தியாவுக்கான வரியை குறைத்துள்ள டிரம்ப் நிர்வாகம், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதையே நிபந்தனையாக விதித்துள்ளது. இவ்வாறு கூறினார்.
மேலும்
-
தனியார் நிறுவன ஊழியர்கள் டூ - வீலர் வாங்க அழைப்பு
-
சந்திர பிரபை வாகனத்தில் லட்சுமி நரசிங்க பெருமாள்
-
பைக் மீது லாரி மோதி விபத்து; திருப்போரூர் அருகே இருவர் பலி
-
மாநில எல்லையில் தடை செய்யப்பட்ட சுரங்கங்களில்... தங்க வேட்டை! உள்ளூர் இளைஞர்களுடன் கேரள கும்பலும் கைகோர்ப்பு
-
திறன் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு அழைப்பு
-
காந்தையாற்றின் குறுக்கே பாலம் மலைவாழ் மக்கள் வேண்டுகோள்